சசிகலா அண்ணன் மகன்.. விவேக் காளையை அடக்கிய வீரர்.. தங்க மோதிரம் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு இன்றைய தினம் ஏராளமான தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
சென்னை: ஜெயாடிவியின் சிஇஓ சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனின் காளையை அடக்கிய மாடு பிடி வீரருக்கு உதயநிதி சார்பில் அரை பவுன் தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது. அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் காளை பிடிபட்டாலும் வீரர்கள் தூக்கி வீசி விட்டு ஓடி வெற்றி பெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் கோலகலமாக நடந்து முடிந்துள்ளன. பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் தங்க நாணயங்கள், பீரோ, சேர், கட்டில் போன்ற பொருட்கள் பரிசாக அளிக்கப்பட்டன.
வாடி வாசலை விட்டு வெளியே வரும் காளைகளைப் பற்றியும் அவற்றின் உரிமையாளர்கள் பற்றியும் வர்ணணையாளர்கள் அறிவிப்பார்கள். காளைகள் முரட்டுத்தனமாக பாய்ந்தால் தொட்டுப்பார்... நெருங்கு பார்ப்போம் என்றெல்லாம் அழகாக வர்ணித்து ஜல்லிக்கட்டு போட்டியை சுவாரஸ்யப்படுத்தினர்.

விவேக் ஜெயராமன் காளை
இதே போல அழகான திமிலை கொண்ட ஒரு காளை ஒன்று வாடி வாசலை விட்டு வெளியே வர காத்திருந்தது. அந்த காளையைப் பற்றி கூறிய விழாக்குழுவினர், ஜெயாடிவி சிஇஒ விவேக் ஜெயராமன் மாடு என்று தெரிவித்தார். அமைச்சர் மூர்த்தி சார்பில் பீரோ ஒன்று பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. உடனே அந்த காளையை பிடிக்க ஆர்வம் அதிகரித்தது. போட்டி போட்டிக்கொண்டு இளைஞர்கள் வாடி வாசலை நெருங்கினர்.

உதயநிதி தங்க மோதிரம்
அதே நேரத்தில் சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் அரைபவுன் மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. வாடி வாசலை விட்டு காளை வெளியே வந்ததும் ஒரு இளைஞர் தைரியமாக காளையின் திமிலை பிடித்து சுற்றினார். சிறுவன் போல காட்சியளித்த அந்த இளைஞர் காளையின் திமிலை பிடித்து மூன்று முறை சுற்றினார். மாடு பிடிபட்டதாக அறிவிக்கப்பட்டு தங்க மோதிரம், பீரோ பரிசளிக்கப்பட்டது.

டிடிவி தினகரன் காளை
அதே நேரத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டியில் கலந்து கொண்ட விகே சசிகலா, டிடிவி தினகரன் காளைகள் யாருடைய கைகளுக்கும் சிக்காமல் ஓடி விட்டது. இதனால் மாட்டின் உரிமையாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் காளை
அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் காளை வாடி வாசலை விட்டு வெளியே வந்த போது, பீரோ, அண்டா, கிப்ட் பேக், ஹேண்ட் பேக் பரிசளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போது வர்ணணையாளர்கள் நெருங்கி வா... தொட்டுப்பார் என்று விழாக்குழுவினர் அறிவித்து சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தினர். அப்போது காளையின் திமிலை ஒருவர் பிடிக்க மாடு தூக்கிப்போட்டு விட்டு ஓடியது. இதனால் மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசளிக்கப்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications