கையை கட்டி.. வெள்ளை சட்டை போட்டா ஏவிஎம் சரவணன் ஆக முடியுமா? மறைந்த திரை ஆளும்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னை: இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு இந்தியா முழுவதிலுமிருக்கும் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் பாதையை தீர்மானித்ததில் ஏவிஎம் நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ? அந்த அளவு ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். மேலும், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலியும் செலுத்தினார்.
தமிழ் தொடங்கி பாலிவுட் வரை பல பிரம்மாண்ட வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம் ஏவிஎம் ஸ்டுடியோஸ். ஏவி மெய்யப்ப செட்டியார் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், பின்னர் கமல், ரஜினி என பல நட்சத்திரங்களை வைத்து நூற்றுக்கணக்கான படங்களை தயாரித்தது.
கடைசியாக ரஜினிகாந்த் நடித்திருந்த சிவாஜி படத்தை ஏவிஎம் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. தமிழ் திரையுலகில் புதிய வசூல் சாதனையை அந்த படம் படைத்தது குறிப்பிடத்தக்கது. மெய்யப்ப செட்டியாருக்கு பிறகு அந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை அவரது மகனான ஏவிஎம் சரவணன் கவனித்து வந்தார்.

ஏவிஎம் சரவணன்
சொல்லப்போனால் இவரது காலத்தில் தான் ஏவிஎம் நிறுவனம் பிரம்மாண்ட படங்களை தயாரிக்க தொடங்கியது. அதற்கு உதாரணம் தான் சிவாஜி. தன்னடக்கத்துக்கு அடையாளமாக ஏவிஎம் சரவணன் தான் சொல்வார்கள். பெரும் பணம், புகழ் என இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் கைகளை கட்டிக்கொண்டு தான் பேசுவார். இதை வைத்து திரைப்படங்களில் கூட நிறைய காட்சிகள் வந்திருக்கிறது. கை கட்டியவர் எல்லாம்.. வெள்ளை உடை போட்டவர் எல்லாம் சரவணன் ஆகி விட முடியுமா என்று கூட சொல்வார்கள்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
அந்த அளவுக்கு திரையுலகினர் அரசியல் கட்சித் தலைவர்களிடையே நன்மதிப்பை பெற்றவர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஏ வி எம் சரவணன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மொழி திரை ஆளுமைகளும் அரசியல் தலைவர்களும் ஏவிஎம் சரவணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானித்ததில் சரவணனின் பங்கு அளப்பரியது என புகழாரம் சூட்டியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
AVM நிறுவனம்
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ - அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.
கலைஞரின் "பராசக்தி"
புதல்வராகவும் - திரைத்துறை ஆளுமையாகவும் "அப்பச்சி" என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு", தலைவர் கலைஞரின் "பராசக்தி", முரசொலி மாறன் அவர்களது "குலதெய்வம்" என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள்.
ஏவிஎம் நிறுவனம்
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications