உதயநிதி மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்! விசாரணைக்கு அழைத்தால் தமிழகம் வருவேன் -அயோத்தி சாமியார்
சென்னை: சனாதனம் குறித்த தனது பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம் என அயோத்தி சாமியார் பரமஹன்ஸ் ஆச்சாரியா தெரிவித்துள்ளார்.
பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைக் கூறியுள்ளார். தன் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது தெரியும் என்றும் இதனால் விசாரணைக்கு அழைக்கும் பட்சத்தில் தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தாம் வருவேன் எனவும் அயோத்தி சாமியார் கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்ததாகவும் அவ்வாறு அவர் செய்யாததால் தான் அவரது தலைக்கு தாம் ரூ.10 கோடி விலை நிர்ணயம் செய்ததாகவும் காரணம் தெரிவித்துள்ளார். சனாதனம் குறித்த கருத்தை உதயநிதி ஸ்டாலின் வாபஸ் பெற்றால் தனது எச்சரிக்கையை தாமும் வாபஸ் பெற்றுக் கொள்வேன் எனக் கூறியிருக்கிறார்.
தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கும் வரை உதயநிதி ஸ்டாலினை விடமாட்டோம் எனக் கூறியுள்ள அயோத்தி சாமியார், துறவியாக இருக்கும் உங்களுக்கு இவ்வளவு கோபம் எதற்கு என்ற கேள்விக்கு தனது மனதில் உதயநிதி மீது இன்னும் தயவு உள்ளதாக தெரிவித்தார்.
சனாதனம் மீது நம்பிக்கை இல்லை என்றால் உதயநிதி வேறு மதத்திற்கு சென்றுவிடலாம் என்றும் விமர்சித்துள்ளார். அயோத்தி சாமியார் இது போன்று கூறிக்கொண்டிருக்கும் இதே வேளையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சனாதனம் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் 120 கோடி மக்கள் சனாதனம் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியுள்ள அந்த சாமியார், சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசுவது அதனை மதிக்கும் 80% மக்களையும் ஒழிப்பேன் என்று கூறுவதாகவே அர்த்தம் எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications