அண்ணாமலை பேசுவதை நினைத்தால் சிரிப்பு வருது... கிண்டல் செய்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேகேதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதை நினைத்தால் தமக்கு சிரிப்பு வருவதாக கூறியிருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.

மேலும், அண்ணாமலை நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை பற்றி தாம் கண்டுகொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

மேகேதாது அணை தொடர்பாக தமிழக பாஜக மற்றும் கர்நாடக பாஜக இடையே ஏற்பட்டுள்ள வார்த்தைப்போர் அக்கட்சியின் டெல்லி மேலிடத்தை கவலைக் கொள்ளச்செய்துள்ளது.

மேகேதாது அணை

மேகேதாது அணை

காவிரியின் குறுக்கே மேகே தாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வரும் வேளையில், அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை கர்நாடகாவுக்கு வழங்கக் கூடாது என மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

உறுதி

உறுதி

இந்நிலையில் மேகேதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசு, இந்த விவகாரத்தில் சமரசத்திற்கே இடமில்லை என கூறி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவும் சரி தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் சரி மேகேதாது அணையை கட்டுவதில் தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நிலைப்பாடு

நிலைப்பாடு

இதனிடையே தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி மேகேதாது அணை தொடர்பாக ஆலோசித்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிட அனுப்பி வைத்தார். இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்னவென்பது மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. அடுத்தடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு அண்ணாமலை செயல்படத் தொடங்கியிருக்கிறார்.

கவலையில்லை

கவலையில்லை

இதனால் மேகேதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி தஞ்சாவூரில் அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டம் கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதலவர் பசவராஜ் பொம்மை, I don't care about annamalai protest எனக் கூறியிருக்கிறார். மேலும், புதிய அணை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதை நினைத்தால் தமக்கு சிரிப்பு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

மாநில உரிமை

மாநில உரிமை

மேகேதாதுவில் புதிய அணை கட்டுவதென்பது தங்கள் மாநில உரிமை என்றும் இதில் தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்களை பற்றி பொருட்படுத்த தேவையில்லை எனவும் கர்நாடக முதல்மவர் பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். இதனிடையே இரு மாநில பிரச்சனைகளை சுமூகமாக கையாள்வது குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+