Exclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்
சென்னை: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை கொரோனோ வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்றாலும் கூட, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஒன் இந்தியா தமிழ் சார்பில் அந்த துறையின் செயலாளர் பீலா ராஜேஷ் ஐ.ஏ.எஸ்.ஸிடம் பேசிய போது அவர் கூறியதாவது;
'' கொரோனோ வைரஸ் பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்கள், சீன வழியாக வேறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர உடற்பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்கான பிரத்யேக டீம் விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது''.
''சென்னை மட்டுமல்லாமல் கோவை,திருச்சி போன்ற மற்ற பெருநகரங்களிலும் கொரோனோ அறிகுறி தொடர்பாக தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் முறை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் சென்னை துறைமுகத்திலும் சுகாதாரத்துறை சார்பாக பரிசோதனை செய்யப்படுகிறது''.
''ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பின் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிகிச்சையை தொடங்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் 3 பேர் தமிழகத்திற்கு வந்து, கொரோனோ வைரஸை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்து சென்றுள்ளனர்.''
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications