Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தரித்திரம் நீங்க.. வறுமை அகல.. பைசா செலவில்லாமல் எளிய பரிகாரங்கள்.. வீட்ல பாசி பருப்பு இருக்கா? செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடன் தொல்லை கழுத்தை நெரிக்கும்போதும், குடும்பத்தை வறுமை ஆட்கொண்டுள்ள போதும், சில எளிய பரிகாரங்களை செய்துவரும்போது, அதிலிருந்து நாம் மெல்ல மெல்ல விடுபட்டு மீண்டு வரலாம். இதுகுறித்து ஆன்மீகத்தில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கு நிம்மதி என்பதே இருக்காது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக நகரும்.. சொல்ல முடியாத அளவுக்கு மனஉளைச்சலுக்கும் ஆளாகிவிடுவார்கள்.

Moong dal Pariharam Spirituality

இப்படி சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள், ஒரு கைப்பிடி பாசிபருப்பை வைத்து பரிகாரமாக செய்யலாம. இதற்கு பாசிப்பருப்பு ஒரு கைப்பிடி, வெல்லம் ஒரு கைப்பிடி என இரண்டையுமே ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் காலை இந்த ஊறிய பாசி பருப்பை பசு மாட்டிற்கு, உங்கள் கையாலேயே தந்துவிட்டு, கடனிலிருந்து விடுபட வேண்டும் என்று கோமாதாவிடம் மனஉதார பிரார்த்தித்தால், கடனிலிருந்து மீண்டுவர முடியும்.

பச்சரிசி: அல்லது ஒரு கைப்பிடி பச்சரிசியை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் சர்க்கரை, வாழைப்பழம் கலந்து பசுவிற்கு தந்தால் கடன் தொல்லையிலிருந்து விடுபடலாம்,,

அதேபோல, வெள்ளிக்கிழமைகளில், அரிசி, பருப்பு, உப்பு, புளி, மிளகாய், மிளகு, கடுகு, சீரகம், மஞ்சள், எண்ணெய், நெய், சர்க்கரை, காய்கறிகள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் வரிசையாக வைத்து பூஜை செய்து ஆரத்தி எடுக்க வேண்டும். இதனால், இந்த மளிகை பொருட்கள் குறைவில்லாது வற்றாது நிறைந்திருக்கும்.

மருதாணி இலைகள்: வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இல்லாவிட்டாலும், செயற்கையாக அமைத்து கொண்டால் பண புழக்கம் உயரும் என்பார்கள்.. அதேபோல, வீட்டு வாசலில் மருதாணி இலைகளை கொத்தாக தொங்க விடலாம்.

இரவு தூங்க செல்லும்போது, தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்துக்கொண்டு படுக்க வேண்டும். மறுநாள் காலையில் நீங்கள் தூங்கி எபம்போது, உங்கள் மனச்சோர்வு, மனஅழுத்தம், மனகுழப்பம் அனைத்தும் நீங்கியிருக்கும். அந்த டம்பளரிலுள்ள தண்ணீரை காலையில் எழுந்ததுமே மரத்திற்கோ அல்லது வீட்டிற்கு வெளியிலோ ஊற்றி விடலாம்.

செல்வம் : பூஜையறையில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி வைத்திருக்க வேண்டும். இந்த நீரில், சிறிது பச்சை கற்பூரம், லவங்கம், துளசியையும் போட்டு வைக்கலாம். இந்த தண்ணீர் செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டதாம்.. மேலும் இதே நீரில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும்போது இறைசக்தி கூடும் என்பது நம்பிக்கையாகும். மறுநாள் இந்த நீரை கீழே கொட்டிவிடாமல், நாம் குடிக்கலாம்.. அல்லது சமையலறை, பீரோ வைக்கும் அறைகளில் தெளித்து விடலாம். இதனால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கும்.

அதேபோல, ஒரு சிவப்பு துணியில், கொட்டைப்பாக்கு, பச்சரிசி, குங்குமம் இந்த 3 பொருளையும் சேர்த்து வைத்து முடிச்சு போல கட்ட வேண்டும். இதனை, யாரும் தொடாதவகையில், பூஜையறையில் வைத்துவிட வேண்டும்.

தரித்திரம்: ஒரு வருடம் கழித்து, இந்த முடிச்சை ஓடும் ஆற்றிலோ அல்லது கடலிலோ போட்டு விடவேண்டும். இதனால், உங்களை பிடித்துள்ள தரித்திரம், சாபம், தீய சக்தி அனைத்துமே விலகிவிடும்.. ஆறு, கடலில் போட முடியாமல் இருந்தால், ஆள்நடமாட்டமில்லாத பகுதியில் தூரமாக போட்டுவிடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+