இந்தியாவுக்கு பதில் பாரத்? அதெப்படி விட முடியும்? RSS மீது சந்தேகம் கிளப்பும் கனிமொழி எம்.பி.!
சென்னை: இந்திய நாட்டிற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு இயற்றுகிறதா அல்லது ஆர்.எஸ்.எஸ். இயற்றுகிறதா என கனிமொழி எம்.பி. சந்தேகம் எழுப்பியுள்ளார்.
பாரத குடியரசுத் தலைவர் என்ற பெயரில் அழைப்பிதழ் வந்து இதுவரை பார்த்ததில்லை என்றும் இதற்கான உள்நோக்கம் என்ன? இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன? என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என சமீபத்தில் தான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறியிருந்தார் என்றும் இந்தச் சூழலில் இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் பல கேள்விகள் எழுவதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் நாடோடிப் பழங்குடிகள் நிலை ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும்,
தமிழக அரசு என்பது எல்லோருக்குமான அரசு என்றும் எல்லோருக்கும் எல்லா வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று நினைத்த பெரியார் வழியில் செயலாற்றக் கூடிய அரசு தமிழ்நாடு அரசு எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
இது தமிழ்நாடு மாடலாக மட்டும் முடிந்து விடாமல், இந்திய அளவிலே, நிச்சயமாக நாடாளுமன்றத்திலும் இது பற்றி பேசுவோம் என்றார். தற்போது இந்தியா என்று சொல்ல வேண்டுமா? இல்லையா? என்று பல குழப்பங்கள் உருவாகி வருவதாகவும் நமக்கு எப்போதும் இந்தியா தான் எனவும் கனிமொழி பேசினார்.

மேலும், இந்தியா பெயர் விவகாரம் பற்றி (As an Indian, I will definitely raise it in Indian Parliament) ஒரு இந்தியன் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் நிச்சயம் குரல் எழுப்புவேன் என்றும் கனிமொழி பேசினார்.












Click it and Unblock the Notifications