Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று சகலரும் கொண்டாடுவீர்".. பாரதியார் பிறந்தநாளுக்கு வைரமுத்து கவிதை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாகவி பாரதியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரதியார் பிறந்தநாளையொட்டி இன்று, கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

பாட்டுக்கொரு புலவன் பாரதி. தம் கவித்துவ, புரட்சிகர எழுத்துகள் மூலமாக எண்ணற்ற மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய மகாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று. அதையொட்டி கவிஞர் வைரமுத்து கவிதை வாசித்து வீடியோ வெளியிட்டுள்ளார். வைரமுத்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:

Vairamuthu bharathiyar bharathi

ஒரு மகாகவி ஜனிப்பது
சதைவழிப்பட்ட
புழைவழியல்ல

காலம்
தன்னை யுகம்செய்துகொள்ள
ஒருவனைத்
தட்டித் தட்டித் தயாரிக்கிறது

அவனை
வறுமையால் ஆசீர்வதிக்கிறது
சனாதனத்தின்மீது மீசை வைக்கிறது

நூற்றாண்டுப் புழுக்கத்தில்
நுரையீரைலைப் பட்டினியிடுகிறது

சாப்பாட்டைப் பறித்து
சாம்ராஜ்யத்தோடு
சண்டையிடச் செய்கிறது

முக்காலம் இருள்செய்து
மூளைக்குள் சூரியன் வைக்கிறது

ராஜசபைகளில் மொழிபயிற்றிப்
பாமரவெளியில் பாடச்செய்கிறது

ஏதேனுமொரு தீயில்
இட்டு இட்டுச்
சுட்டுச் சுட்டுத்
தங்கம்தான் என்று
சான்றளிக்கிறது

தெருவைத் திரட்டி
அவமதிக்கச் செய்கிறது
தேசத்தையே கூட்டி
அஞ்சலிக்கச் சொல்கிறது

ஆயுளைப் பறிக்கிறது
புகழைத் திணிக்கிறது
மண்ணுக்குள் புதைத்து
மகாகவி ஆக்குகிறது

அவன்
அக்கிரகாரத்தான் என்று சிலர்
அலட்சியம் செய்யாதீர்;
சத்திரியத் தமிழ் எழுதியவன் என்று
சகலரும் கொண்டாடுவீர்

வாழ்க பாரதி!

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இன்றைய தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், சின்னச்சாமி ஐயர் இலட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் சுப்பிரமணி. இவரது கவிப் புலமையைப் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு, 'பாரதி' என்று பட்டம் வழங்கினார். நவீன தமிழ்க் கவிஞர்களின் முன்னோடியாகவும், தமிழ் மொழியில் சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்த பாரதியார், 'மகாகவி' எனப் போற்றப்படுகிறார்.

மகாகவி பாரதியார் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்று விளங்கினார். மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1904 முதல் 1906 வரை, "சுதேச மித்திரன்" பத்திரிகையில் பணியாற்றினார். 1907 ஆம் ஆண்டு, "இந்தியா" என்ற வார இதழையும், "பாலபாரதம்" என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். "கண்ணன் பாட்டு", "குயில் பாட்டு". "பாஞ்சாலி சபதம்" போன்ற காவியங்களைப் படைத்தார். கீதையைத் தமிழில் மொழி பெயர்த்தார்.

மகாகவி பாரதியார் பாடல்கள் மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டியதால் ஆங்கிலேய அரசு அவரைக் கைது செய்ய முயன்றது. ஆனால், பாரதியார் ரயில் மூலம் தப்பி பிரெஞ்சு நாட்டு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி சென்று வாழ்ந்தார். பின்னர், சென்னை, திருவல்லிக்கேணியில் வசித்து வந்த அவர் 1921ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் மறைந்தார்.

பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும். தமிழ்ச் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவற்றைப் படிப்பவர் உள்ளத்தை ஈர்த்து வருவதைக் காண்கிறோம். மகாகவி பாரதியார் பிறந்த நாளான, டிசம்பர் 11ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+