"சர்ப்ரைஸ்" தந்த ஸ்டாலின்.. கோட்டையில் கொடியேற்றியதுமே அதிரடி.. சென்னையில் "விடுதலை நாள் மியூசியம்!"
கோட்டையில் கொடியேற்றி வைத்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஸ்டாலின்
சென்னை: இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறித்து கொள்ளும் வகையில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களிடம் வசப்பட்டு இருந்த இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது..நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்கள் ஆகும் நிலையில் இன்று சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Recommended Video
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி, முன்னதாகவே அழைப்பு விடுத்திருந்தார்.

நினைவிடம்
பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று 13ம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இன்றைய சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினார்.. அதேபோல, 76-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். முன்னதாக, கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும், காவல்துறையின் மரியாதையையும் முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார்.

கருணாநிதி
தொடர்ந்து மாநில விருதுகளை முதல்வர் வழங்கினார். அப்போது, தகைசால் தமிழர் விருதை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவுக்கு ஸ்டாலின் வழங்கினார்.. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் தன்னுடைய சுதந்திர தின உரையாற்றினார்.. அப்போது, "விடுதலை முழக்கத்தை எழுப்பிய முதல் மண் தமிழ் மண். சிப்பாய் கலகத்திற்கு முன்பே சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழர்கள். முதலமைச்சர்கள் கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கருணாநிதி. சிப்பாய் கலகத்திற்கு முன்பே சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழர்கள்" என தமிழகத்தின் பெருமைகளை ஸ்டாலின் சொல்லியபோதெல்லாம் கூடியிருந்த மக்கள் கைகளை தட்டி கரகோஷம் எழுப்பினார்கள்..

சர்ப்ரைஸ்
மேலும், தன்னுடைய உரையில் முதல்வர் சிறப்பு அறிவிப்புகளை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.. குறிப்பாக, அரசு ஊழியர்கள், சுதந்திர போராட்ட வீரர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்புகளையும் வெளியிட்டார்.. அதில், "தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும். ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் பேர் பயன்பெறுபவர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் 18 ஆயிரத்திலிருந்து ரூபாய் இருபதாயிரமாக உயர்த்தப்படுகிறது.

டெக்னாலஜி
அதே போன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது... சுதந்திரப் போராட்ட வீரர்களின் வழித்தோன்றலுக்கான சிறப்பு மாத ஓய்வூதியமும் ஒன்பதாயிரத்திலிருந்து ரூபாய் பத்தாயிரமாக உயர்த்தப்படுகிறது. இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் 260 ஆண்டு தொடர் பங்களிப்பு குறித்து எதிர்கால இளம் சமுதாயம் அறித்து கொள்ளும் வகையில் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்படும் என்பதை பெருமிதம் பொங்க இந்த வரலாற்று சிறப்பு மிகுந்த நாளில் அறிவிக்கிறேன்" என்றார் முதல்வர் முக ஸ்டாலின்..
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications