சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு அறிவிப்பு.. அபராதம் கட்டிட்டீங்களா? நோட்டீஸ் வந்துருக்கா? உடனே பாருங்க
சென்னை: சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக அறிவுரை ஒன்றையும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு தந்துள்ளனர்.
சென்னை மாநகரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக போலீசார் சாலைகளில் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். இதற்காகவே சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

அபராதம்: சமீபத்தில் விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை, கண்டுபிடித்து அபராதம் விதிக்க, சென்னையில் 360 டிகிரியில் சுழலும் அதிநவீன ஏஎன்பிஆர் கேமரா வசதியுடன் கூடிய 2டி ரேடார் அமைப்புள்ள வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அமல்படுத்தியிருந்தனர்.
தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ட்ரிபில் ரைட், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குவது மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களை இந்த 360 டிகிரி கேமரா, அப்பட்டமாக படம்பிடித்து, கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பிவைத்துவிடுகிறது.. இந்த காட்சியை சரிபார்த்து, விதி மீறுபவருக்கு உடனடியாக அபராத ரசீது அனுப்பப்படுகிறது..
வாகனங்கள்: இதுபோன்ற வாகனங்கள் தென் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அந்தவகையில், விதிகளை மீறும் பலரும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றன. இதைத்தவிர, சென்னை மாநகரில் தினமும் 6 ஆயிரம் போலீசார் களப்பணியாற்றி வருகிறார்கள். 1500-ல் இருந்து 3 ஆயிரம் கேமராக்கள் வரையில் பொருத்தப்பட்டு அதன் மூலமும் போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது..
எனினும், சில நேரங்களில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடாமல் முறையாக வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் கிளம்பி உள்ளன.. அதாவது, தினமும் 5 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலையில், ஒருசிலர் மட்டும் தாங்கள் விதிமுறைகளில் ஈடுபடவில்லை, ஆனாலும், நோட்டீஸ் வந்துள்ளது என்கிறார்களாம்.
நிவாரணம்: ஒருவேளை, இதுபோன்று உண்மையிலேயே தவறு நடந்திருந்தால், பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் 7 நாட்களுக்குள் அவர்கள் அப்பீல் செய்யலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அத்துடன், இதற்காக போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை காட்டி, வாகன ஓட்டிகள் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, விதிமீறலில் ஈடுபட்ட ஒரு நபருக்கு 7 நாட்களுக்கு பிறகே அபராத ரசீது அனுப்பப்படுவதால், அதற்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் போக்குவரத்து காவல்துறையை அணுகி உரிய ஆதாரங்களை காட்டி அபராதம் கட்டுவதில் இருந்து விலக்கு பெறலாம் என்றும் போலீசார் தெரித்துள்ளனர்.
கும்பல்: இதற்கெல்லாம் காரணம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலுள்ள கன்ட்ரோல் ரூமில், தினமும் 3500 ரசீதுகள் அனுப்பப்பட்டு வருகிறதாம்.. எனினும், சென்னை மாநகர காவல்துறையை போன்ற போலியான முகவரிகளை உருவாக்கி, மர்ம நபர்கள் சிலர் பணம் பறிக்கும் வேலையிலும் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாம்.
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, இதுபோன்ற நபர்களிடம் உஷாராக இருக்க வேண்டும், போலீசிலிருந்து தொடர்ச்சியாக போன் செய்து மிரட்டும் வகையில் யாரும் பேச மாட்டார்கள், பணம் பறிக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள் இப்படி பேச வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் இணையதள முகவரியிலேயே அபராதங்களை கட்டிக் கொள்ளலாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications