சென்னையில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில்.. பயம் அறியாத இளங்கன்றுகள்.. நெஞ்சை பிழிய வைத்த சம்பவம்
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மற்றறொரு இரு சக்கர வாகனம் வந்த பயங்கரமாக மோதியில் நண்பருடன், கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பிரபு என்பவருடைய மகன் அபிஷேக். இவருக்கு 18 வயது ஆகிறது.. இவர் அந்த பகுதியில் உள்ளள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கொருக்குப்பேட்டை காமராஜர் நக 9-வது தெருவைச் சேர்ந்தவர் விவேக் (19). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

நண்பர்களான அபிஷேக் விவேக் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்னை வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் இருந்து ரிசர்வ் வங்கி நோக்கி சுரங்கப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே எர்ணாவூரைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் அபிஷேக், விவேக் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சுரங்கப்பாதையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தனர். எதிரே வந்து மோதிய ரமேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அபிஷேக், விவேக் இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அபிஷேக் மற்றும் விவேக் இருவரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காலில் காயம் அடைந்த ரமேஷ், சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சென்னை பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த அபிஷேக் மற்றும் விவேக் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனத்தில்சென்ற நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
"லாஸ்ட் ரைட்.." 150 கிமீ வேகம்.. பெற்றோர் டார்ச்சரால் பிக்பாஸ் பிரபலம் எடுத்த விபரீத முடிவு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்












Click it and Unblock the Notifications