சென்னையில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில்.. பயம் அறியாத இளங்கன்றுகள்.. நெஞ்சை பிழிய வைத்த சம்பவம்
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மற்றறொரு இரு சக்கர வாகனம் வந்த பயங்கரமாக மோதியில் நண்பருடன், கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பிரபு என்பவருடைய மகன் அபிஷேக். இவருக்கு 18 வயது ஆகிறது.. இவர் அந்த பகுதியில் உள்ளள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கொருக்குப்பேட்டை காமராஜர் நக 9-வது தெருவைச் சேர்ந்தவர் விவேக் (19). இவர், தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

நண்பர்களான அபிஷேக் விவேக் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் சென்னை வடக்கு கடற்கரை ராஜாஜி சாலையில் இருந்து ரிசர்வ் வங்கி நோக்கி சுரங்கப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அப்போது எதிரே எர்ணாவூரைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் அபிஷேக், விவேக் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சுரங்கப்பாதையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி படுகாயம் அடைந்தனர். எதிரே வந்து மோதிய ரமேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அபிஷேக், விவேக் இருவரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அபிஷேக் மற்றும் விவேக் இருவரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காலில் காயம் அடைந்த ரமேஷ், சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சென்னை பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உயிரிழந்த அபிஷேக் மற்றும் விவேக் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருசக்கர வாகனத்தில்சென்ற நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications