மக்கும் கழிவிலிருந்து உரம் வந்தாச்சு.. அடுத்து அதிலிருந்து இயற்கை எரிவாயு.. சென்னையில் பலே திட்டம்!
சென்னை: மக்கும் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதை தொடர்ந்து இனி அவற்றிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலைகள் ஜூலை முதல் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் கல்வி, அடிப்படை கட்டமைப்பு, மருத்துவ வசதிகள், மாநகராட்சியின் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றில் முதல் இடத்தில் உள்ளது. எனினும் இங்கு திடக்கழிவு மேலாண்மையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது தலைநகர் சென்னை.
பெருங்குடி, கொடுங்கையூரில் பெரிய மலை போல் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கியுள்ளன. இவற்றால் மழை பெய்தால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

சென்னை
மக்கள்தொகை அதிகம் கொண்ட சென்னையில் நாள்தோறும் 5000 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த கிடங்குகளில் கழிவுகளை தேக்கி வைப்பதை குறைக்க மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு சென்னை மாநகராட்சி விற்பனை செய்து வருகிறது.

காய்கறி கழிவுகள்
இதையடுத்து மக்கும் தன்மை கொண்ட காய்கறி கழிவுகள், உணவுக் கழிவுகளிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் ஆலைக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. தனியார் பங்களிப்பு மற்றும் சென்னை மாநகராட்சி மூலம் தினந்தோறு்ம 100 டன் திடக்கழிவுகளை கையாள கூடிய 7 இயற்கை எரிவாயு ஆலைகள் செயல்பாட்டுக்கு வரவுள்ளன.

இயற்கை எரிவாயு
சென்னையில் சேத்துப்பட்டில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு ஆலை ஜூலை மாதம் முதல் செயல்பட உள்ளது. குடியிருப்புகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வெளியேற்றப்படும் திடக்கழிவுகள் நேரடியாக கொள்முதல் செய்து சேத்துப்பட்டு ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது.

கழிவுகள்
இந்த கழிவுகள் இயந்திரங்கள் மூலம் ஊழியர்கள் உதவியுடன் தரம் பிரிக்கப்படும். இவை மாட்டு சாணத்துடன் 45 நாட்களுக்கு பதப்படுத்தி மீத்தேன் எரிவாயுவை உற்பத்தி செய்யலாம். இதன்படி தினந்தோறும் 4000 கிலோ மீத்தேன் எரிவாயு, 1500 கிலோ இயற்கை உரம் சேத்துப்பட்டில் மட்டும் உற்பத்தி செய்யலாம்.

சுற்றுச்சூழல்
இந்த இயற்கை எரிவாயு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாதது. மேலும் எல்பிஜி எரிவாயுவை விட குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எரிவாயுவை சமையலுக்கும் வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம். 7 இயற்கை எரிவாயு ஆலைகளும் செயல்பாட்டு வரத் தொடங்கினால் தினமும் 700 டன் கழிவுகள் என ஒரு மாதத்திற்கு 21 ஆயிரம் டன் கழிவுகள் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்வது குறையும். இதனால் கிடங்குகளில் மலை போல் குப்பைகள் தேங்குவது குறையும்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications