யாரும் Half Boil சாப்பிடாதீங்க.. மா.சுப்பிரமணியன் கொடுத்த முக்கிய வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி பரும் சூழலில், பொதுமக்கள் யாரும் ஹாஃப் பாயில் சாப்பிட வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் கோழிக்கறியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியம் என்று கூறியுள்ள மா.சுப்பிரமணியன், திடீரென உயிரிழக்கும் கோழிகளின் இறைச்சியை சாப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்தன. இவற்றின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட போது, பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்பின் தமிழ்நாடு முழுவதும் உள்ள கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுக்கு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டன.

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பாக முழு கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு பணிகளை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. அதற்கேற்ப பல்வேறு கோழிப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் ஏராளமானோருக்கு திடீரென காய்ச்சல், சலி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பறவை காய்ச்சல் பரவி வருவதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பறவை காய்ச்சல் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு நோட்டீஸ் வழங்கி இருந்தது. அந்த தகவல் கிடைத்தவுடன் காகங்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் திடீரென உயிரிழந்தால், உடனடியாக ஆழமான குழி தோண்டி புதைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை பறவை காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மனிதர்களில் யாருக்கும் இதுவரை பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேபோல் பொதுமக்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் ஹாஃப் பாயில் போன்ற உணவுகளை சில நாட்களுக்கு தவிர்ப்பது நல்லது. அதேபோல் கோழி இறைச்சியை நன்றாக வேக வைத்து சாப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திடீரென உயிரிழக்கும் கோழிகளை சாப்பிட வேண்டாம்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் முட்டை, கோழிக் கறி, உணவகங்களில் சிக்கன் தொடர்பான உணவு உள்ளிட்டவற்றை தவிர்ப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு இப்படியான உணவை கொடுக்காமல் இருப்பது சரியான விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications