பிறப்பு சான்றிதழ்..ரூ.2000 + ஆதார் கார்டு.. டைம் நெருங்குது மக்களே.. மொத்தமா மாறுதே.. என்னனு பாருங்க
சென்னை: செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரப்போகின்றன.. அவையெல்லாம் என்ன தெரியுமா?
பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, தபால் நிலைய வைப்பு தொகை மற்றும் மற்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்துள்ளவர்கள் தங்கள் கணக்குகளில் ஆதார் நம்பரை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

2000 நோட்டுக்கள்: அதேபோல, 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். மறுநாள், அக்டோபர் 1-ந்தேதி முதல் இந்த 2000 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது. இதற்கு வேறு அவகாசமும் தரப்படவில்லை என்பதால், அதற்குள் எல்லாரும் வங்கிகளுக்கு சென்று மாற்றியாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், அலுவலக பகுதிகளில், பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த, காற்று தர மேலாண்மைக்கான ஆணையம் மாற்றியமைக்க போகிறது.. இதற்கான புதிய அட்டவணையை வருகிற 1-ந்தேதி முதல் கொண்டுவரப்போகிறது.
போட்டோக்கள்: பத்திரப்பதிவு துறையிலும் புதிய மாற்றம் வரப்போகிறது.. அதாவது, ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த போட்டோக்களையும், ஆவணமாக இணைக்க வேண்டும் என்று பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டிருக்கிறது.. அக்டோபர் 1-ந்தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் பதியப்படும் அனைத்து சொத்துகள் தொடர்பான ஆவணங்களிலும் அந்த சொத்துகள் குறித்த போட்டோக்கள் ஆவணமாக இணைக்கப்பட உள்ளது.
பிறப்பு மற்றும் இறப்பு திருத்தச்சட்டம் அக்டோபர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரப்போகிறது.. இதன்மூலம் அரசின் சேவைகளுக்கு ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ள முடியும்..

லைசென்ஸ்: குறிப்பாக, மக்கள் தொகை பதிவு, வாக்காளர் பதிவு, ஆதார் எண், ரேசன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், சொத்துப் பதிவு, கல்வி நிறுவன சேர்க்கை, திருமண பதிவு, அரசுப்பணி நியமனம் இப்படி அனைத்துக்குமே ஒரே ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல, அரசு வேலைகளுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ,அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகளில் சேருவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த அதிரடிகள் நடைமுறைக்கு வரஉள்ள நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலைகளிலும் ஏதாவது மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடம் ஏற்பட்டு வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications