பிறப்புச் சான்றிதழ் தொலைந்து விட்டதா? பெயர் திருத்தம் செய்வது எப்படி? சான்றிதழை பெறுவது ரொம்ப ஈஸி
சென்னை: பிறப்பு சான்றிதழ் என்பது ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் மிக முக்கியமான சட்ட ஆவணம் ஆகும்.. இதில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், கல்வி, வேலை, பாஸ்போர்ட், திருமணம் போன்ற பல்வேறு நிலைகளில் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், பிறப்புச் சான்றிதழில் உள்ள பிழைகளை உரிய முறையில் திருத்துவது அவசியமாகிறது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..
பிறப்பு சான்றிதழ் பெறுவது என்பது சமீப காலமாகவே ரொம்ப எளிமையான விஷயமாகிவிட்டது.. குழந்தை பிறந்ததும், அந்த தகவலை மருத்துவமனை அல்லது செவிலியர் நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சி அலுவலகத்திற்கு பதிவு செய்கிறார்கள். அந்த பதிவு செய்யப்பட்ட பிறகே பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ்
பொதுவாக குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் எந்த அபராதமும் இல்லாமல் சான்றிதழ் கிடைக்கும். பதிவு செய்த பிறகு, உங்கள் பகுதியின் நகராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இப்போது ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கவும் முடியும்.. தமிழ்நாடு அரசு இணையதளம் மூலம் பதிவு எண் அல்லது குழந்தையின் விவரங்களை கொடுத்து சான்றிதழை டவுன்லோடு செய்யலாம்.
மருத்துவமனையில் கொடுக்கும் பிறப்பு அறிக்கை, பெற்றோரின் ஆதார் போன்ற அடையாள ஆவணங்கள் இருந்தாலே, சான்றிதழ் தயாராகி விடும். 21 நாட்களை கடந்த பிறகு பதிவு செய்ய வேண்டும் என்றால், கூடுதல் நடைமுறைகள் மற்றும் சிறிய அபராதம் இருக்கும். ஆனால் அதையும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் எளிதாக செய்து முடிக்கலாம்.
பிறப்பு சான்றிதழில் எழுத்து பிழைகள்
அதேபோல பிறப்புச் சான்றிதழில் உள்ள சிறிய எழுத்துப் பிழைகளை சரி செய்வது எளிதான செயல்முறையாகும். இதற்காக சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரை அணுகி மனு அளிக்க வேண்டும்.
குழந்தையின் பெற்றோரின் அடையாளச் சான்றுகள் மற்றும் மருத்துவமனை வழங்கிய டிஸ்சார்ஜ் சம்மரி போன்ற ஆவணங்களை சமர்ப்பித்தால், அதிகாரிகள் சரிபார்த்து பிழைகளைத் திருத்தித் தருவார்கள். இந்த வகை திருத்தங்களுக்கு அரசிதழ் அறிவிப்பு தேவையில்லை; பிரமாணப் பத்திரம் போதுமானதாகும்.
பெயரை மாற்ற வேண்டுமா?
ஆனால், பிறப்புச் சான்றிதழில் முழுப் பெயரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதற்கான நடைமுறை சற்று விரிவாக இருக்கும். இதற்காக முதலில் தமிழக அரசின் அரசிதழில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கான விண்ணப்பங்களில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கையொப்பமிட வேண்டும்.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால், பதிவுபெற்ற மருத்துவரிடம் பெற்ற ஆயுள் சான்றிதழை இணைக்க வேண்டும். அரசிதழில் பெயர் மாற்றத்திற்கான கட்டணம் ரூ.750 ஆகும்; இது karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செலுத்தலாம்.
பெயர் மாற்றத்திற்கான விண்ணப்பப் படிவங்களை stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் பழைய பிறப்புச் சான்றிதழ், ஆதார், ரேஷன் கார்டு, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
பெயர் மாற்ற திருத்தங்கள்
அரசிதழில் பெயர் மாற்றம் வெளியான பிறகு, அந்த அறிவிப்பின் நகலை கொண்டு பிறப்பு பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதிய பிறப்புச் சான்றிதழைப் பெற முடியும். அதன் பிறகே ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட பிற ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய இயலும்.
அரசிதழில் பெயர் பிரசுரிக்கப்பட்ட பிறகு, ஐந்து நாட்களுக்குள் அதனை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஒருமுறை பெயர் மாற்றம் செய்த பிறகு, "என்கிற" என்ற பெயரில் மீண்டும் பிரசுரிக்க அனுமதி இல்லை. அரசிதழில் ஏற்பட்ட அச்சுப் பிழைகள் இருப்பின், ஆறு மாதங்களுக்குள் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க விதியாகும்.
பிறப்பு சான்றிதழ் தொலைந்தால்?
இதேபோல், பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. தற்போது டிஜிட்டல் வசதிகள் மூலம் அதை மீண்டும் எளிதாகப் பெற முடியும்.
தமிழ்நாடு அரசு வழங்கும் crstn.org என்ற இணையதளம் வழியாக பிறப்பு சான்றிதழை ஆன்லைனில் தேடி, PDF வடிவில் பதிவிறக்கம் செய்யலாம். பிறந்த நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், மாவட்டம் போன்ற விவரங்களை உள்ளீடு செய்தால், பதிவு இருந்தால் உடனடியாக சான்றிதழ் கிடைக்கும். இந்த வசதி 01.01.2018க்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்புகளுக்கு உள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகரங்களில் மாநகராட்சி இணையதளங்களின் மூலமாகவும் பிறப்பு சான்றிதழை நேரடியாக டவுன்லோடு செய்யலாம்.... 2018க்கு முந்தைய பதிவுகளுக்கு சில இடங்களில் நேரில் அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இருக்கலாம். இருந்தாலும், பழைய பதிவுகளையும் டிஜிட்டல் வடிவில் மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால், எதிர்காலத்தில் அவையும் ஆன்லைனில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications