Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொய்! நடிகர் சித்தார்த்தை விமானத்தில் பயணிக்க தடை விதிக்கணும்! அமைச்சரிடம் பாஜக நிர்வாகி புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சித்தார்த்தும் அவரது குடும்பத்தினரும் இரு ஆண்டுகள் விமான பயணம் செய்ய தடை கோரி மத்திய இணையமைச்சரிடம் பாஜக நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். அது போல் சித்தார்த் மீது இந்து மக்கள் கட்சியும் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு வீரர்கள் இந்தியில் பேசச் சொல்லி தமது பெற்றோரை வற்புறுத்தியதாக சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். மேலும் அவர்கள் ஆங்கிலத்தில் பேச மறுத்ததாகவும் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தனது பெற்றோரை 20 நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் காக்க வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை விமான நிலைய நிர்வாகத்தினர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை எம்பி சு வெங்கடேசன் கோரிக்கை விடுத்திருந்தார்.

பரபரப்பு

பரபரப்பு

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில் இந்தி பேசத் தெரிந்த சித்தார்த் வேண்டுமென்றே தமிழகத்தில் மொழி பிரச்சினையை உருவாக்குகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரு ஆண்டுகள் விமான பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் வி.கே.சிங்கிற்கு பாஜக மாநில நிர்வாகி புகார் மனு அளித்துள்ளார்.

சங்கர் பாண்டி

சங்கர் பாண்டி

பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் நலப் பிரிவு செயற்குழு உறுப்பினர் சங்கர் பாண்டி புகார் மனுவை அளித்தார். இந்த புகார் மனுவை அளித்து குறித்து செய்தியாளர்களை சந்தித்த சங்கர் பாண்டி கூறுகையில் சித்தார்த் நன்றாக இந்தி பேசக் கூடியவர். அவரது குடும்பத்தினரும் இந்தியில் பேசுவார்கள். அப்படியிருக்கும் போது வேண்டுமென்றே நடிகர் சித்தார்த் இந்தியில் பேச சொல்லி கட்டாயப்படுத்தியதாக பதிவு போட்டிருந்தார்.

தமிழ் பேசும் அதிகாரிகள்

தமிழ் பேசும் அதிகாரிகள்

ஆனால் அன்றைய தினம் விமான நிலையத்தில் பணியில் இருந்தவர்கள் தமிழ் பேசக் கூடிய தமிழகத்தை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். எனவே மொழி பிரச்சினையை வைத்து குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் நடிகர் சித்தார்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகள் விமான பயணத் தடைவிதிக்க வேண்டும் என மத்திய இணையமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.

விளம்பர நோக்கம்

விளம்பர நோக்கம்

அது போல் விளம்பர நோக்கத்துக்காகவே நடிகர் சித்தார்த் இந்த பிரச்சினையை கிளப்பியுள்ளதாக இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. அந்த புகாரில் தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சித்தார்த்தின் பெற்றோரின் உடமைகளை சோதனை செய்தார். அப்படியிருக்கும் போது அவர் ஏன் இந்தியில் பேச சொல்லி இவர்களை வற்புறுத்த வேண்டும் என இந்து மக்களள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசு மீது விமர்சனம்

மத்திய அரசு மீது விமர்சனம்

நடிகர் சித்தார்த் அண்மைக்காலமாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். கொரோனா காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் நிறைய பேர் உயிரிழந்தனர். ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத்தோ அது போல் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எங்கும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு மிகவும் காட்டமாக நடிகர் சித்தார்த் பதிலளித்திருந்தார். பின்னர் திமுக ஆட்சி அமைந்தவுடன் நடிகர் சித்தார்த்தை காணவில்லை என நெட்டிசன்கள் கிண்டலாக பதிவு போட்டிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+