தமிழகத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களை பிடிக்கும்... ஹெச்.ராஜா நம்பிக்கை
Recommended Video

தஞ்சை: பாஜக கூட்டணி தமிழகத்தில் 35 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 360 தொகுதியில் வெற்றி பெறும் என்றார்.

தமிழகத்தில் 35 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் விரைவில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்வார் என்றும் தெரிவித்தார்.
முத்ரா வங்கி மூலம் பல கோடி பேருக்கு வங்கிக் கடன் கிடைத்துள்ளதாக கூறிய ஹெச்.ராஜா, ஜிஎஸ்டி வரி விதிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்தார். ஜி எஸ் டி வரியால் இரண்டாம் கணக்கு முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தமிழகத்தில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகளில், சிவகங்கை தொகுதியில் ஹெச். ராஜா போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications