தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம்! ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா!
சென்னை: தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைப்பதே அரிது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் 11 தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.
இதில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள் கருத்துக்கணிப்புகள் பொய்யாகும் என கூறி வருகின்றன.

பாஜகவை தடுக்க
இந்நிலையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் மற்றக்கட்சி தலைவர்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.

வாய்ப்பு எப்படி?
இந்நிலையில் தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் பாஜகவுக்கு வாய்ப்பு எப்படி உள்ளது? கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன என்பதை பார்ப்போம். தெலுங்கானாவில் 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்றது.

காங்., பாஜக தலா 1 இடம்
டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பின்படி தெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரே ஒரு இடம் தான் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் சந்திர சேகர் ராவின் டிஆர்எஸ் கட்சிக்கு 14 இடங்கள் கிடைக்கும் என்றும் இதர கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு இடமும் இல்லை
இதேபோல் ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு இடையேதான் போட்டியுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 இடங்களையும் தெலுங்குதேசம் கட்சி 17 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றக்கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

உற்றுநோக்கப்படும் சாணக்யா
2014ஆம் நாடாளுமன்ற தேர்தலில் சாணக்யா கருத்துக்கணிப்பு அப்படியே இருந்ததால் இம்முறை அதன் கருத்துக்கணிப்பு உற்று நோக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கும என சாணக்யா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications