“முட்டாள்தனம்”.. கூட்டணியில் இருந்துகொண்டே இந்த வேலையை செய்யலாமா? பாஜக மீது தமிழ்மகன் உசேன் காட்டம்!
அதிமுக மீதான பாஜகவின் சமீபத்திய விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழ்மகன் உசேன் பாஜகவினரை சாடியுள்ளார்.
சென்னை : கூட்டணியில் இருந்துகொண்டு பாஜகவினர் அதிமுகவை விமர்சிப்பது முட்டாள்தனமான செயல் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினரை அதிமுகவிற்குள் இழுக்க எடப்பாடி பழனிசாமி தனி குழு அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குழு பாஜகவில் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் கூறப்படுகிறது.

உரசல்
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் அதிமுக எம்.பி சிவி சண்முகம் பாஜக கூட்டணி குறித்துப் பேசியது இரு கட்சிகளிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இரு கட்சிகளின் நிர்வாகிகளும் மாற்றி மாற்றி விமர்சித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போதும், அதிமுக - பாஜக இடையேயான உரசல் வெளிப்பட்டது.

மோதல் உச்சகட்டம்
இந்நிலையில் தான் சமீபத்தில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவராகப் பதவி வகித்த சிடிஆர்.நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி.விங் நிர்வாகிகள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக, அதிமுக இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

புகைச்சல்
இதனால் கடும் கோபமடைந்த அண்ணாமலை, எந்த வினைக்கும் எதிர்வினை உண்டு என்று காட்டமாகப் பேசியிருந்தார். பாஜகவினர், எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதும் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பாஜகவுக்கு எதிராகப் பேசத் தொடங்கியுள்ளனர். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜகவுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து ஈபிஎஸ், தனது அணி நிர்வாகிகளோடு தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பாஜக செயல் முட்டாள்தனமானது
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், "பாஜகவினர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்தது முட்டாள்தனமான செயல். நிர்வாகிகள் கட்சி மாறி வேறு கட்சியில் இணைவது இயல்பு தான். அதில் எந்த தவறுமில்லை. அதிமுக பாஜக இடையே எந்த பிரச்சனையும் இல்லை. கூட்டணிக் கட்சியாக இருந்துக்கொண்டு கடுமையாக பாஜகவினர் சிலர் விமர்சிப்பது சரியில்ல, முட்டாள்தனமானது" எனச் சாடியுள்ளார்.
-
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications