கன்னடம், ஆங்கிலத்தையும் விடவில்லை.. "வேல் யாத்திரையில் தமிழ்ப் பெண்கள் கூடுவரே.." சி.டி.ரவி ட்வீட்
சென்னை: பாஜக தலைவர் முருகன் தலைமையில் திருத்தணியில் இன்று துவங்கி டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே, கையில் வேலுடன் முருகன் சென்னையில் இருந்து திருத்தணிக்கு இன்று காலை காரில் கிளம்பினார். அவரை தடுப்பதற்காக சென்னையை சுற்றி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சருமான சிடி ரவி ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
தமிழில் அந்த ட்வீட் வெளியிடப்பட்டுள்ளதோடு அதன் அர்த்தத்தை ஆங்கிலம் மற்றும் கன்னடத்திலும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
திரிசூலம் கொண்டவளின் வீர மகனவன்
வெற்றிவேலன் என்ற நம் தெய்வம் இவன்
தாய்க்கு ஒரு சிக்கல் என்று தெரிந்தால்
படை திரட்டி ஓடிவரும் சிங்காரவேலன்
தன்மகன் போல் நம்முருகன் என்று - தமிழ்ப்பெண்கள்
வேல் யாத்திரை சென்றிட கூடுவரே இன்று
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையே ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார்.