13 தொகுதி இடை தேர்தல்..துள்ளி குதிக்கும் ‘இந்தி’ கூட்டணி! உள்ளுக்குள்ளேயே மூண்ட சண்டை! பாஜக பதிலடி!
சென்னை: சமீபத்தில் சில மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் தங்களின் கூட்டணி பெரும் வெற்றி பெற்று விட்டதாகவும், பாஜக கடும் தோல்வியடைந்ததாகவும் துள்ளிக் குதித்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நிறைவடைந்த கையோடு, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை அறிவித்தது. 10ஆம், தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், 13 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - 5, திரிணாமுல் காங்கிரஸ் - 4 , ஆம் ஆத்மி - 1, திமுக - 1, பாஜக - 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தியில் சுயேட்சை வேட்பாளர் வென்றனர்.
இந்நிலையில் நடந்து முடிந்த சில மாநில இடைத் தேர்தலிகளில் பாஜக கடும் தோல்வியடைந்ததாகவும் துள்ளிக் குதித்து கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நான்கு இடைத்தேர்தல்களில் அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் பாஜக இரண்டாம் இடத்தில் வந்துள்ளது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்ததோடு, பாக்டா தொகுதியில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரனாகட் தக்க்ஷின் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி (சி பி எம்) டெபாசிட் இழந்து 13,082 வாக்குகளை பெற்றுள்ளது. அந்த தொகுதியில் பாஜக பெற்ற வாக்குகள் 74,485. மனிக்டாலா தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வெறும் 9502 வாக்குகள் பெற்று போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வி டெபாசிட்டை கூட இழந்து நிற்கிறது.
பீகாரில் ரூபாலி தொகுதியில் வெற்றி பெற்றது சுயேச்சை வேட்பாளர். இரண்டாம் இடம் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திற்கு. INDI கூட்டணியின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. யாரோ பெற்ற வெற்றியை தனதாக்கி கொண்டு மார் தட்டி கொள்கின்றன எதிர்க்கட்சிகள். ஹிமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு இடங்களை பெற்றுள்ள நிலையில், ஒரு இடத்தில் பாஜக வென்றுள்ளது பலமே! பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்வாரா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாபில் INDI கூட்டணியின் ஆம் ஆத்மி வெற்றி பெற்ற நிலையில், அதே INDI கூட்டணியின் காங்கிரஸ் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது, இரண்டாவது இடம் பாஜகவுக்கு. இதை தங்கள் கூட்டணியின் வெற்றி என காங்கிரஸ் சொல்வது கேலிக்கூத்து. பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் இரு இடங்களில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் பாஜகவுக்கு தோல்வி தான் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.
தமிழகத்தில் விக்கிரவாண்டி தேர்தலை அ தி மு க புறக்கணித்திருந்தாலும் அக்கட்சி தி மு க வின் 'B' டீமாய் செயல்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியுற்றது அதிர்ச்சியோ, ஏமாற்றமோ அல்லது எதிர்பாராததோ அல்ல என்பதை அரசியல் புரிந்த அனைவரும் ஒப்புக்கொள்வர். பல மாநிலங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் படு தோல்வி அடைந்துள்ளதோடு, மூன்றாவது, ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டும், டெபாசிட்டை கூட தக்க வைக்க இயலாத நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
INDI கூட்டணி என்று சொல்லிக்கொண்டு பஞ்சாப், மேற்கு வங்காள மாநிலங்களில் அதே கூட்டணி கட்சியிடம் தோற்பது வெட்கக்கேடானது என்பது குறித்து கவலைப்படாமல், தோல்வியைத் தழுவினாலும் பாஜக தோற்றுவிட்டது என்பது மலிவான பசப்பு அரசியல். 'அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி இறந்து விட்டார்' என்ற நிலையில் தான் இன்று INDI கூட்டணி உள்ளது என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.
உத்தரகண்ட் மாநிலத்தை தவிர மற்ற மாநில இடைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைந்துள்ளது என்பதே உண்மை. இதே நிலை நீடித்தால், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் காணாமல் போவதோடு, விரைவில் வெற்றுத்தாளில் இப்போதுள்ள INDI கூட்டணி சுக்கு நூறாக உடைந்து போகும் என்பது காலத்தின் கட்டாயம்.” என கூறியுள்ளார்.
-
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள்












Click it and Unblock the Notifications