“3-2” எடப்பாடி முன்னிலை! நெருங்கும் 2024 தேர்தல் - பாஜகவின் “மெகா” பிளான் - அப்ப ஓபிஎஸ் நிலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் டெல்லி 2024 தேர்தலை மனதில் வைத்து மெகா திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

ஓபிஎஸ் ஆலோசனை

ஓபிஎஸ் ஆலோசனை

இந்த நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு இருக்கிறார். தீர்ப்பு எதிராக வந்தாலும் சட்டப்போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடனும் அலோசனை மேற்கொண்டும் வரும் பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தால் தங்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அவர் தரப்பு கேவியட் மனுத் தாக்கல் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பால் உற்சாகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது சோர்வடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாறும் தீர்ப்புகள்

மாறும் தீர்ப்புகள்

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக இதுவரை உயர்நீதிமன்றம் 5 தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது. இதில் முதல் தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகவும் 2 வது தீர்ப்பு ஓபிஎஸுக்கு சாதகமாகவும் 3 வது தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகவும் 4 வது தீர்ப்பு ஓபிஎஸுக்கு சாதகமாகவும் கடைசியாக வெளியான 5 வது தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாகவும் வந்துள்ளதால் நடப்பது என்னவென்றே தெரியாமல் இரு தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர்.

 டெல்லியின் பிளான்

டெல்லியின் பிளான்

இது போன்ற நெருக்கடியான சூழல் இரண்டு தலைவர்களும் தங்களின் ஆதரவாளர்களிடம் டெல்லியை நோக்கியே கைகாட்டுகிறார்கள். ஆனால் டெல்லியின் திட்டமோ வேறாக இருக்கிறதாம். 2024 தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவில் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா அணிகள் பிரிந்து நின்றால் வாக்குகள் சிதறும் என்று உணர்ந்த டெல்லி,
அதிமுகவும் கூட்டணி அமைத்து மொத்த வாக்குகளையும் பெறுவதற்கு மூவரும் ஒன்றாக வேண்டும் என்றே விரும்புகிறதாம். கடந்த முறையும் இதே கணக்கில்தான் எடப்பாடி - ஓபிஎஸை பாஜக சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்த பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+