மேலிடம் வழங்கிய பணத்தை பிரிப்பதில் தகராறு: பாஜக நிர்வாகி வீட்டில் தாக்குதல்! இளைஞர் அணி பதவி பறிப்பு
சென்னை: பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் அமர்நாத் யோகேஷ்வரன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாஜக பிரமுகர் செல்வமணி வீட்டில் தாக்குதல் நடத்தியதாக அமர்நாத் ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் கூறி அவரது பதவி பறிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மணிமங்கலத்தில் வசித்து வரும் பாஜக பிரமுகர் செல்வமணியின் வீடு, கார் மீது ஒரு கும்பல் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. பாஜக நிர்வாகி அமர்நாத் யோகேஷ்வரன் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இவரது பதவியை பாஜக தலைமை பறித்துள்ளது.

சென்னையை அடுத்த மணிமங்கலத்தில் வசித்து வருபவர் செல்வமணி. ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கற்கள், கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே சென்றனர். அப்போது வீட்டின் வாசலில் நின்ற கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து உடைத்தனர்.
மேலும் வீட்டின் மீதும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் நேற்று 5 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 5 பேரும் பாஜக இளைஞரணி மாநில துணைத் தலைவர் அமர்நாத் யோகேஷ்வரனின் ஆதரவாளர்கள் என்பது தெரியவந்தது.
கட்சி உட்பூசல் காரணமாகவே அமர்நாத் யோகேஷ்வரன் இந்த செயலை செய்ய சொன்னதாக கூறப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், எஸ்.ஐ.ஆர். பணி தொடர்பாக வழங்கப்பட்ட பணத்தை பிரித்துக் கொள்வதில் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டு இருந்ததாகவும், அமர்நாத் தூண்டுதலின் பேரிலேயே தான் அவர்கள் 5 பேரும் செல்வமணி வீட்டில் சென்று கார், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கியதாகவும் கூறினர்.
இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அமர்நாத் யோகேஷ்வரனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி பாஜக அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாலும் அவரை பதவியில் இருந்து நீக்கம் செய்ததாக பாஜக இளைஞரணி சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செல்வமணி வீட்டில் நடந்த தாக்குதலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமர்நாத் யோகேஷ்வரன் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026












Click it and Unblock the Notifications