அயோத்தி ராமர் கோவில் திறப்பு.. மோடி மீது எடப்பாடி பழனிசாமி நேரடி அட்டாக்.. ஆடிப் போன பாஜக!
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்வைத்து பிரதமர் மோடியை நேரடியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது பாஜகவை ரொம்பவே ஆடிப் போக செய்துவிட்டது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக அதிமுக இருந்தது. டெல்லியில் "இந்தியா" கூட்டணிக்கு போட்டியாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

விமர்சனமற்ற போக்கு: ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா, ஜெயலலிதா என அதிமுக தலைவர்களை அடுத்தடுத்து விமர்சித்து வந்தார். இதனைத் தொடர்ந்தே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக முடிவெடுத்தது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்த போது கூட, தற்காலிகமான முடிவாகத்தான் இருக்கும் எனவும் கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில்தான் கடந்த 3 மாதங்களாக அதிமுக- பாஜக இரு கட்சிகளுமே பரஸ்பரம் கடுமையான விமர்சனங்களைத் தவிர்த்தே வந்தன. பாஜகவுக்கு ஆதரவான சில நிலைப்பாடுகளையும் அதிமுக எடுத்து வந்தது. இதனை திமுக கூட்டணி கட்சிகள் சுட்டிக்காட்டி விமர்சித்தும் வந்தன.
பாஜகவின் நம்பிக்கை: அதேபோல அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா குறித்து முன்னர் கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, அதை ஆதரிக்கும் வகையில்தான் கூறியிருந்தார். இதுவும் பாஜகவுக்கு ஒருவித நம்பிக்கையைத் தந்தது. எப்படியும் கடைசிநேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வந்துவிடும் என்பது அந்த நம்பிக்கை.
மோடிக்கு பதிலடி: ஆனால் சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கோவில் கட்டுவதால் ஓட்டுகள் வந்துவிடாது. அயோத்தி ராமர் கோவிலை திறந்து வைத்ததாலேயே மோடிக்கு எல்லோரும் ஓட்டுப் போடுவார்களா? அப்படியானால் அதிமுக ஆட்சியில்தான் ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டன; குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டன; அன்னதானம் தொடங்கப்பட்டன. எடப்பாடி சுற்றிய கிராமங்களில் கட்டப்பட்ட கோவில்களுக்காக அன்னப்போஸ்ட்டாக நான் வெற்றி பெற வேண்டும் என கடுமையாக விமர்சித்தார்.
அதிர்ந்து போன பாஜக: பாஜகவுடனான உறவு முறிவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியை முதல் முறையாக கடுமையாக விமர்சித்திருப்பது பாஜகவினரை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துவிட்டதாம். அதிமுக, கூட்டணிக்கு வரும் என்ற பாஜகவின் நம்பிக்கையை ஒரே அடியாக தகர்த்து எறிந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்பது மூத்த பத்திரிகையாளர்களின் கருத்து.
"இந்தியா" கூட்டணி பிளவு: அத்துடன், "இந்தியா" கூட்டணியில் இருந்து இன்னும் எத்தனை கட்சிகள் வெளியேறுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம் எனவும் எடப்பாடி பழனிசாமி பொடி வைத்து பேசியிருப்பதும் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில் காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கை கோர்ப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது என்பதை வெளிப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த பேட்டி இருக்கிறது என்கின்றன தேசிய ஊடகங்கள்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications