சிகரெட் கடை வைத்திருந்தவர் வைகோ மகன்..! அண்ணாமலைக்கு ஆதரவாக தமிழக பாஜக பதிலடி!
வைகோவின் அறிக்கைக்கு நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார்
சென்னை: பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி, துரோக அரசியல் செய்யும் வைகோவுக்கு கிடையாது" என்று மதிமுக பொதுச்செயலாளருக்கு, தமிழக பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, சில நாட்களுக்கு முன்பு தேனி கலெக்டர் ஆபீஸ் முன்பு, பாஜக சார்பில் ஒரு போராட்டம் நடந்தது..
இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக வைகோ ஏன் குரல் கொடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அண்ணாமலை
அண்ணாமலையின் இந்த கேள்விக்கு நேற்றைய தினம் வைகோ பதிலளித்திருந்தார்.. அணை சம்பந்தப்பட்ட விவரங்களையும், அது தொடர்பாக தான் இதுவரை மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளையும் விரிவாக சொல்லி, ஒரு அறிக்கையாகவே வைகோ வெளியிட்டிருந்தார்.

வெறும் போலீஸ்
குறிப்பாக அதில், "முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை ஏற்கெனவே தீர்க்கப்பட்டுவிட்ட ஒன்றாகும்... அணையை உடைக்கலாம் என்று தற்போது கேரள அரசு திட்டம் வகுக்கிறது. அதனை எதிர்த்துத் தமிழக மக்கள் பொங்கி எழுவார்கள். பாஜவில் இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. இந்தப் பிரச்னையைப் பற்றி அகரம்கூட தெரியாத அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது" என்று வைகோ காட்டமாக கூறியிருந்தார்.

பாஜக
இந்நிலையில் வைகோவின் இந்த பேச்சுக்கு, தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.. அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பாஜவில், இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்ற அண்ணாமலை, முதலில் வெறும் போலீஸ் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு தமிழகத்தை பற்றி ஒன்றும் தெரியாது. வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது. அண்ணாமலைகள் என் பெயரை உச்சரிக்க எந்த தகுதியும் கிடையாது" : வை.கோ.

சிகரெட் கடை
மதிமுகவில், இப்போது வந்து சேர்ந்திருக்கின்ற துரை வைகோ, முதலில் வெறும் 'சிகரெட் கடை' வைத்து கொண்டிருந்தார். அவருக்கு வைகோவை நம்பி திமுகவை விட்டு வெளியேறி உயிர் நீத்தவர்களுக்கு அவர் செய்த துரோகம் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு துரோக அரசியல் தெரியாது. தமிழினத்தை கொன்று குவித்த திமுக என்று கூறிவிட்டு ஒரு எம்.பி பதவிக்காக அதே திமுகவிடம் கட்சியை அடகு வைத்த கேவல அரசியல் வைகோவுக்கு தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது. '

வாரிசு அரசியல்
வாரிசு அரசியல்' என்று ஸ்டாலினை விமர்சனம் செய்து விட்டு ஓட்டு அரசியலுக்காக எதிர்கால முதல்வரே என்று ஸ்டாலினை அழைத்த சந்தர்ப்பவாத அரசியல் தெரியும். ஆனால், அண்ணாமலைக்கு தெரியாது. வாயை மூடி மௌனம் காக்க வேண்டியது வைகோ தானேயன்றி அண்ணாமலை அல்ல. பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ விமர்சனம் செய்யும் தகுதி, துரோக அரசியல் செய்யும் வைகோவுக்கு கிடையாது" என்று பதிலடி தந்துள்ளார்.
-
இந்து மக்கள் கட்சி பேரணிக்கு அனுமதி இல்லை.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
இந்து மக்கள் கட்சி மாநாட்டுக்கு தடை? கொதித்து எழுந்த அண்ணாமலை, அர்ஜுன் சம்பத்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்!












Click it and Unblock the Notifications