அதிமுக எங்களுடன் சேர்வதால் அழியும் என்பதை நம்பாதீங்க! திமுக பலவீனமாக இருக்கிறது-நயினார் நாகேந்திரன்
சென்னை: "திமுக கூட்டணியில் சலசலப்பு இருந்து வருகிறது. பலமாக இருப்பதாக மாயை! நாங்கள் யாரையும் மிரட்டி கூட்டணியில் சேர்க்கவில்லை. பாஜவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுக அழியும் என மற்ற கட்சிகள் கவலைப்பட வேண்டாம்" என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார்.
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "யாரையும் மிரட்டி பண்ணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதிமுகவை மிரட்டியதாக சொல்பவர்கள், ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியல. யாரை கண்டு அவர்கள் பயந்து போய் இருக்கிறார்கள்? என தெரியல. மிரட்டுவதற்காக நாங்க யாரும் இல்லை" என்று கூறியிருக்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும் என்று கூறுகிறார்களே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதாவது அதிமுகவை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் அவங்களுக்கு என்ன வந்திருக்கு? அவங்க அவங்க கட்சியை, அவங்க அவங்கள தான பாக்கணும். நீங்க ஏன் அடுத்த வீட்ட பத்தி கவலைப்படுறீங்க? உங்க வீட்ல நடக்கக்கூடிய பிரச்சனைய பாருங்க. இன்னைக்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியில பங்கு கேட்கறது மாதிரி சொல்றாங்க. திமுக கூட்டணி நெருக்கடியியல் இருக்கு. விடுதலை சிறுத்தைகள் தொடருமான்னு தெரியல. நீங்க ஏன் அண்ணா திமுகா பத்தி கவலைப்படுறீங்க. தமிழகத்துல பாரதிய ஜனதா ஆட்சிக்கு கொண்டு வரதுக்கு வாய்ப்பு உண்டு.
தமிழகத்தில் நாங்கள் இப்பொழுது அண்ணா திமுக கூட கூட்டணி வச்சிருக்கிறோம். எங்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். வர வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவின் கொள்கைகள், எங்களுடைய சிறிய திட்டம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஜெயிக்கணும் திமுக ஆட்சி அகற்றப்படணும் இதுதான் எங்களுடைய கருத்து" என்று பதிலளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications