மணிப்பூரில் தமிழர்களும் ஊடுருவி கலவரத்தை தூண்டினர்.. பாஜக போன விஜயதரணி பகீர் குற்றச்சாட்டு
சென்னை: பாஜகவில் தேர்தல் முடிந்ததும் தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்திற்கான அறிவிப்பு வரும் என கூறி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதரணி. மேலும் பிரதமர் மோடி குறித்தும் மணிப்பூர் கலவரம் குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்பப்பட்டார்.

ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு உடன்படவில்லை இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
விஜயதரணி: ஆனால் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பாஜகவில் தனது நிலை என்ன என்பது குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக புதிய தலைமுறை ஊடகத்திடம் பேசிய அவர்,"மக்களவைக்கான நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. விளவங்கோடு சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியலிலும் என் பெயர் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என நான் இருந்தேன்.
வாய்ப்பு இல்லை: ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. ஏற்கனவே மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் அடுத்த தலைமுறைக்கு குறிப்பாக பெண்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் போட்டியிடவில்லை. தற்போதும் பெண்களுக்கே தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் எனக்கு மகிழ்ச்சிதான். விளவங்கோடு தொகுதியில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். பிரதமர் மோடி மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதை பலர் அது எண்ணமாக இருக்கிறது. அதற்காகத்தான் தேவையில்லாமல் விவகாரங்களை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக மணிப்பூரில் கலவரம் நடந்தது குறித்து பிரதமர் தெளிவாக இருக்கிறது.
திட்டமிட்டு கலவரம்: அங்கு நடந்த விஷயங்கள் பிரதமரின் கவனத்தில் உள்ளது. அங்கு நிறைய தூண்டுதல்கள் உள்ளது. திட்டமிட்டு அங்கு பிரச்சினை நடக்கிறது. பிரதமர் சென்றால் பிரச்சினை வரும். ஆறுதல் சொல்வதில் நம்பிக்கை இல்லாத பிரதமர் தீர்வை நோக்கி பயணிக்கிறார். மணிப்பூரில் கலவரம் வெடித்த நிலையில் நிறைய பேர் அங்கு ஊடுருவி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து கூட அங்கு ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திட்டமிட்டு அவர்கள் கலவரத்தை தூண்டியுள்ளனர். இதற்கான ஆதரங்கள் விரைவில் வெளியாகும்" என பேசி இருக்கிறார்.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு












Click it and Unblock the Notifications