நாட்டு வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டி திமுக நிர்வாகி படுகொலை.. சென்னை வண்டலூரில் பரபரப்பு
சென்னை: சென்னை வண்டலூரில் திமுக நிர்வாகி ஆறாமுதன் மர்மநபர்களால் வெடிகுண்டு வீசப்பட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். திமுக நிர்வாகி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஆறாமுதன். இவர் மீது அடையாளம் தெரியாத மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அதோடு அரிவாள் கொண்டும் வெட்டியது. இந்த தாக்குதலில் திமுக நிர்வாகி ஆறாமுதனின் கை, மற்றும் தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதில் படுகாயம் அடைந்த திமுக நிர்வாகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றன்றனர். திமுக நிர்வாகி ஆறாமுதன் மீது தாக்குதல் நடத்தியது ஏன்... சொந்த பகை காரணமாக தாக்குதல் நடந்ததா... அல்லது வேறு காரணங்களா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications