தமிழக ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வதந்தி என கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக ரயில்களை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக தீவிரவாத அமைப்பு ஒன்று மர்ம தகவலை கொடுத்திருந்தது. ஆனால் விசாரணையில் இது வதந்தி என தெரியவந்தது.
மும்பை பகத்கி கோடிக்கில் இருந்து மன்னார்குடி செல்லும் ரயிலை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து சென்னை ரயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வதந்தி என தெரியவந்தது.

இதே போல் சென்னை தாம்பரத்திலிருந்து ஜோத்பூருக்கு செல்லும் விரைவு ரயிலுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ரயிலில் சோதனை நடத்திய பிறகு அது வதந்தி என கண்டறியப்பட்டது.
இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications