முதல்வர் எடப்பாடியார் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: திருப்பூரில் இருந்து போன் போட்டு புரளி!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை, சேலம் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு எழுந்துள்ளது.
Recommended Video

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சென்னை பசுமை வழிச் சாலையில் அரசு பங்களா உள்ளது. அது போல் அவரது சொந்த மாவட்டமான சேலத்திலும் அவருக்கு சொந்த வீடு உள்ளது.

இந்த நிலையில் இந்த இரு வீடுகளிலும் வெடிகுண்டு வைத்ததாக மர்ம நபர் ஒருவர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் முதல்வரின் சேலம் இல்லத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் இன்று காலை சோதனை செய்தனர்.
சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. அது போல் சென்னையிலும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து பொய்யான தகவல் அளித்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருப்பூரை சேர்ந்தவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
முன்னதாக நடிகர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடியின் இல்லத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில் சேலையூரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர்தான் மிரட்டல் விடுத்தது என்பது தெரியவந்தது. விசாரணையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு குறித்த புகாரை காவல் துறையினர் ஏற்கவில்லை.
இதனால் தன்னுடைய செல்போனில் இருந்து 19 முறை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறிப்பிடத்தக்தது.












Click it and Unblock the Notifications