Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித், குஷ்பு வீடு என 11 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ந்த சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் முதல்வர் ஸ்டாலின், நடிகர் அஜித் வீடு உள்பட 11 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் அரவிந்த் சாமி, லிவிங்ஸ்டன், இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு நேற்று காலையில் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபர்களை நெருங்கிவிட்டதாகவும், விரைவில் பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Chennai bomb threat police

வெடிகுண்டு மிரட்டல்

தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக நேற்று காலையில் காமாட்சி செல்வகணேஷ் என்ற பெயரில், சென்னையில் உள்ள டி.ஜி.பி அலுவலகத்திற்கு 'இ - மெயில்' வந்துள்ளது. அதில் அந்த நபர், 'சென்னை ஆழ்வார்பேட்டை சித்த ரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன என்று மட்டும் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை நடத்தினர். காலை 10 மணி முதல் 11 மணி வரை என 1 மணி நேரம் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் எந்த ஒரு வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை. இதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

மீண்டும் மிரட்டல்

இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது. இதேபோல் நடிகர் அஜித் குமார், லிவிங்ஸ்டன், இசையமைப்பாளர் கங்கை அமரன், அரவிந்த் சாமி, இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ், திண்டுக்கல் ஐ லியோனி, செஸ் வீரர் பிரக்ஞானந்தா, நடிகை குஷ்பு சுந்தர், திருப்பதி நாராயணம், அமலாக்கத்துறையில் இருக்கக் கூடிய சிஆர்பிஎப் அலுவலகம் என மொத்தம் 11 இடங்களில் வெடிகுண்டு இருப்பதாக மெயில் வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையிலும் சந்தேகப்படும்படியான எந்த ஒரு பொருளும் பிடிபடவில்லை.

விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்து. தொடர்ந்து அரசியல் தலைவர்கள், நடிகர்கள் வீட்டுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல்கள் வரும் நிலையில் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்றும், கிட்டத்தட்ட மிரட்டல் விடும் நபரை நெருங்கிவிட்டதாகவும் சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்து இருந்தார்.

கடந்த சில நாட்​களாகவே முதல்​வர் ஸ்டாலின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்​கட்​சித் தலை​வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்​சர்​கள், ஆளுநர் மாளி​கை, நடிகர் விஜய், அஜித், நடிகை திரிஷா என பல்வேறு இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+