சென்னை, கோவையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் வெடி குண்டு மிரட்டல்.. பெற்றோர்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னை மற்றும் கோவையில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து பள்ளியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை போரூர் அடுத்த மாங்காடு செருகம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.பி.பி பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு வழக்கம் போல் இன்று மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், இந்த பள்ளிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீசார் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் பள்ளியில் வந்து சோதனையிட்டு வருகின்றனர். இதேபோல் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டு வெடிகுண்டு இருக்கிறதா என போலீசார் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக பள்ளிக்கு வந்திருந்த மாணவ மாணவிகளை பாதுகாப்பு கருதி வெளியே அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் பள்ளி வளாகம், பள்ளிக்கூட பஸ்கள், வராண்டாக்கள் என பள்ளி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கும் நேற்று நள்ளிரவில் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் இரவே போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று நள்ளிரவில் இருந்து போலீசார் பள்ளியில் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. எனினும் யார் இந்த மிரட்டலை விடுத்தது என்பது இது வரை போலீசர் கண்டுபிடிக்கவில்லை. இந்த நிலையில், இரண்டாவது முறையாக இன்றும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால் பெற்றோர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications