கிறிஸ்தவ மத போதகர் சாம் ஜெபதுரை காலமானார்
Recommended Video
மத போதகர் சாம் ஜெபதுரை காலமானார்- வீடியோ
சென்னை: பிரபல கிறிஸ்தவ மத போதகர் சாம் ஜெபதுரை இன்று காலை காலமானார். இன்று காலை ஐந்தரை மணியளவில் அவர் காலமானார்.
ஏலிம் சபை, அன்றன்றுள்ள அப்பம் ஆகியவற்றை நிறுவி நடத்தி வந்தவர் சகோதரர் சாம் ஜெபதுரை. இடையன்குடியில் பிறந்தவரான சாம் ஜெபதுரை, தனது பள்ளிப் படிப்பை இடையன்குடியில் முடித்தார்.
புனித ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் மேற்படிப்புகளை படித்தார். எம்ஏ அரசியல் அறிவியலில் முது நிலைப் படிப்பை முடித்த சாம் ஜெபதுரை, வருமான வரித்துறையில் பணியாற்றி வந்தவர்.
16 வருட கால பணிக்குப் பிறகு முழு நேர மதப் பணிக்கு மாறினார். இவரது மனைவி வினோ ஜெபதுரையும் அரசுப் பணியில் இருந்தவர்தான். 1985ம் ஆண்டு இவரும் தனது பணியை விட்டு விட்டு கணவரின் மதப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
மறைந்த சகோதரர் சாம் ஜெபதுரைக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.
Comments
English summary
Bro Sam Jebadurai is no more, he breathed his last today morning.
Story first published: Wednesday, October 31, 2018, 14:34 [IST]