தவெக பெண் தொண்டர்கள் மீது கண்ணாடி துண்டுகள் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி!
சென்னை: சென்னை வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று இரவு ஆதவ் அர்ஜுனா அங்கு பிரசாரம் செய்தார். தெருமுனை கூட்டம் நடந்தபோது பெண் தொண்டர்கள் மீது உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்கி உள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் இன்று தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தவெகவின் நாஞ்சில் சம்பத் மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது பலரும் அவரது பேச்சை கேட்டு கொண்டிருந்தனர்.
கண்ணாடி துண்டுகள் வீச்சு
இந்த சமயத்தில் திடீரென்று தவெக பெண் தொண்டர்கள் மீது உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டது. இதனால் பெண் தொண்டர்கள் பறிப்போயினர். இதுபற்றி அவர்கள் அங்கிருந்த பிற நிர்வாகிகளிடம் கூறினர். யார் கண்ணாடி துண்டுகளை பிரசார கூட்டத்தில் எறிந்தது? என்பது தெரியவில்லை. இதுபற்றி ஆதவ் அர்ஜுனாவிடம் புகார் சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் மேடையில் பேசினார்.
ஆதவ் அர்ஜுனா
அப்போது, ஆதவ் அர்ஜுனா, ''எங்கள் கூட்டத்தில் பெண்மணிகள் இருக்கக்கூடிய ஏரியாவில் கண்ணாடி பாட்டில் வைத்து அடித்து கொண்டு இருக்கிறார்கள். சோடா பாட்டில் கொண்டு அடித்துள்ளார்கள். பாட்டிலை உடைத்து துளாக்கி பெண்மணியின் தோளில் அடித்து உள்ளார்கள். காவல்துறை இதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இதே இடத்தில் உட்காருவோம். கிளம்ப மாட்டோம். அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது? கண்ணாடி பாட்டில் வைத்து அடிப்பது தான் ஜனநாயகமா?.
திமுக மீது குற்றச்சாட்டு
முக ஸ்டாலின் சார் அனைத்தையும் நிப்பாட்டுங்கள். எவ்வளவு தான் அடிப்பீர்கள்? திருப்பி அடித்தால் தாங்கமாட்டீர்கள். நாங்கள் பொறுமையாக இருந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பெண்கள் மீது கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். கண்ணாடி பாட்டில் வீசியவர்களை இன்று இரவே கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆதவ் அர்ஜுனா இங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பார்'' என்றார்.
-
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
முதல் நாளே இப்படியா? விஜய் மீது 5 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு! காவல்துறை அதிரடி -
"இன்னொரு கரூர் சம்பவம் நடக்கக்கூடாது! விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம்!" ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு -
இது ஆகுறது இல்ல.. தேர்தல் வேலையை விட்டுவிட்டு புகார் கொடுப்பதே வேலையாகிப்போச்சு விஜய்க்கு -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
ஜோசப் விஜய் பெரம்பூரில் கால் வெச்சதுமே? புகையுது தவெக? ரூ.100 கோடி பிராமிஸ் தந்த அந்த விஐபி யார் -
அதிமுகவிலிருந்து வந்த 32 பேருக்கு.. சீட்டு கொடுத்த விஜய்.. இரட்டை இலையை காலி செய்யும் தவெக? -
விஜய் 2 தொகுதிகளில் போட்டி ஏன்.. ஜெயலலிதா ஸ்டைலில் பக்கா பிளான்.. செங்கோட்டையன் விளக்கம் -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே












Click it and Unblock the Notifications