தவெக பெண் தொண்டர்கள் மீது மதுபாட்டில் வீச்சு.. ஆதவ் அர்ஜுனா பிரசாரத்தில் அதிர்ச்சி!
சென்னை: சென்னை வில்லிவாக்கம் சட்டசபை தொகுதியில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று இரவு ஆதவ் அர்ஜுனா அங்கு பிரசாரம் செய்தார். தெருமுனை பொதுக்கூட்டம் நடந்தபோது பெண் தொண்டர்கள் மீது உடைந்த மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவின் ஆதவ் அர்ஜுனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்கி உள்ளார். வில்லிவாக்கம் தொகுதியில் இன்று தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தவெகவின் நாஞ்சில் சம்பத் மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது பலரும் அவரது பேச்சை கேட்டு கொண்டிருந்தனர்.
கண்ணாடி துண்டுகள் வீச்சு
இந்த சமயத்தில் திடீரென்று தவெக பெண் தொண்டர்கள் மீது உடைந்த கண்ணாடி துண்டுகள் வீசப்பட்டது. இதனால் பெண் தொண்டர்கள் பறிப்போயினர். இதுபற்றி அவர்கள் அங்கிருந்த பிற நிர்வாகிகளிடம் கூறினர். யார் கண்ணாடி துண்டுகளை பிரசார கூட்டத்தில் எறிந்தது? என்பது தெரியவில்லை. இதுபற்றி ஆதவ் அர்ஜுனாவிடம் புகார் சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் மேடையில் பேசினார்.
ஆதவ் அர்ஜுனா
அப்போது, ஆதவ் அர்ஜுனா, ''எங்கள் கூட்டத்தில் பெண்மணிகள் இருக்கக்கூடிய ஏரியாவில் கண்ணாடி பாட்டில் வைத்து அடித்து கொண்டு இருக்கிறார்கள். சோடா பாட்டில் கொண்டு அடித்துள்ளார்கள். பாட்டிலை உடைத்து துளாக்கி பெண்மணியின் தோளில் அடித்து உள்ளார்கள். காவல்துறை இதை கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் இதே இடத்தில் உட்காருவோம். கிளம்ப மாட்டோம். அராஜகம் நடந்து கொண்டிருக்கிறது? கண்ணாடி பாட்டில் வைத்து அடிப்பது தான் ஜனநாயகமா?.
திமுக மீது குற்றச்சாட்டு
முக ஸ்டாலின் சார் அனைத்தையும் நிப்பாட்டுங்கள். எவ்வளவு தான் அடிப்பீர்கள்? திருப்பி அடித்தால் தாங்கமாட்டீர்கள். நாங்கள் பொறுமையாக இருந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் பெண்கள் மீது கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம். கண்ணாடி பாட்டில் வீசியவர்களை இன்று இரவே கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆதவ் அர்ஜுனா இங்கே உட்கார்ந்து கொண்டு இருப்பார்'' என்றார்.












Click it and Unblock the Notifications