சென்னையிலிருந்து பெங்களூருக்கு சர்ர்ர்ன்னு பறக்கலாம்.. வருகிறது எக்ஸ்பிரஸ் சாலை.. நிர்மலா அறிவிப்பு
சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை புதிதாக அமைக்கப்படும், இந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதி அதிகமாக மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை புதிதாக அமைக்கப்படும், இந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதி அதிகமாக மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் விவசாயம் போலவே உள்கட்டமைப்பு வசதிக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில், உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் இளம் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.உள்நாட்டில் மின்னணு பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம்.
சென்னை பெங்களூர் இடையே அமைக்கப்படும் இந்த சாலை வர்த்தக வழித்தடமாக இருக்கும். இந்த சாலை இருக்கும் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும், என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சென்னை - பெங்களூர் இடையே போக்குவரத்து மிகவும் எளிதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications