பெங்களூர் வாசிகளின் பல வருட கனவு.. நிறைவேற்றிய நிர்மலா சீதாராமன்.. செம நியூஸ்.. சூப்பர் அறிவிப்பு!
சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை புதிதாக அமைக்கப்படும், இந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதி அதிகமாக மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை புதிதாக அமைக்கப்படும், இந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதி அதிகமாக மேம்படுத்தப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கு இடையில் நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகளை தற்போது நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்னிந்தியாவில் சென்னை, பெங்களூர் நகரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக பெங்களூர் மக்களின் பல வருட வருட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெங்களூரில்தான் உலகிலயே அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. அங்கு புறநகர் ரயில் இல்லாதது இதற்கு முக்கிய காரணம். சென்னையில் அவ்வளவு டிராபிக் நேரில் இல்லாமல் இருக்க புறநகர் ரயில் போக்குவரத்தும் ஒரு காரணம்.
இந்த நிலையில் பெங்களூர் நகருக்கு போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலை கிடைக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார் .
அதன்படி பெங்களூர் புறநகர் ரயில் செயல்படுத்தப்பட உள்ளது. பெங்களூரு நகரில் 18,600 கோடி செலவில் புற நகர் ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்படும். ரயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications