பேருந்து போக்குவரத்து தொடங்கி.. முதல் நாளே இப்படியா.. சென்னையில் குழப்பம்.. என்ன நடக்கிறது?
சென்னை: சென்னையில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில் தற்போது மக்கள் இடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. பேருந்து எந்த மார்க்கமாக செல்லும் என்பதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுக்க தற்போது பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குறைவான எண்ணிக்கையில் தற்போது பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.
சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்க தொடங்கி உள்ளது. 50% மக்கள் கூட்டத்துடன் சென்னையில் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது.

என்ன குழப்பம் நிலை
சென்னையில் இதனால் சாலையில் அதிக அளவில் பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது. ஆனால் தற்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மாவட்டங்களுக்கு உள்ளே மட்டுமே பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் எல்லை தாண்ட அனுமதிக்கப்படவில்லை. சென்னையில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில் தற்போது மக்கள் இடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

சென்னை குழப்பம்
பேருந்து எந்த மார்க்கமாக செல்லும் என்பதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் எல்லை தாண்ட அனுமதிக்கப்படாத காரணத்தால், சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் பேருந்துகள் இயங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது சென்னையின் ஒரு எல்லையில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இருக்கும் ஏரியாவிற்கு செல்ல வேண்டும் என்றால் ஒரே பேருந்தில் செல்ல முடியாது. இதற்கு பேருந்து மாற வேண்டிய சூழ்நிலை.ஏற்பட்டுள்ளது

எங்கு செல்கிறது
இதில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கீழ் மதுராந்தகம், தாம்பரம், பல்லாவரம், செயின்ட் தாமஸ் மவுண்ட், பம்மல், மறைமலை நகர், திருப்போரூர், காட்டாங்குளத்தூர், அச்சரபாக்கம் ஆகிய முக்கியமான பகுதிகள் உள்ளது. சென்னையில் வேலை பார்க்கும் மக்கள் இங்கு பலர் வசிக்கிறார்கள். இவர்கள் பேருந்து போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக குழம்பி போய் உள்ளனர். இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரதத்தில் வசிக்கும் மக்கள் சென்னை செல்ல அரசு பேருந்து வருமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

சில பேருந்துகள்
சில அரசு பேருந்துகள் செங்கல்பட்டு - சென்னை இடையே பயணிக்கிறது. எல்லைக்கு மிக அருகே செல்லும் பேருந்துகள் வேறு வழி இன்றி எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டள்ளது. ஆனால் மொத்தமாக இரண்டு மாவட்டங்களுக்கு இடையே இன்னும் பேருந்து போக்குவரத்து முழு வீச்சில் தொடங்கப்படவில்லை. இதனால் மக்கள் எப்படி பயணம் செய்வது என்று குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

முன்பு இ பாஸ்
முன்பு தமிழகத்தில் இ -பாஸ் முறை அமலில் இருந்த போதும் இதேபோல் நடந்தது. காஞ்சிபுரம் , செங்கல்பட்டு எல்லையில் இருந்து சென்னை செல்ல இ பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது. 2 கிமீ தூரம் இருந்தால் கூட , எல்லையை கடக்கும் நிலை என்றால் இ பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது அதே நிலைமை பேருந்து போக்குவரத்துக்கும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications