மொத்தமாக பேருந்து பயணமே மாறிடுச்சே.. பொருத்தப்பட்ட ஜிபிஎஸ்.. இனி ரொம்ப எளிமையா டிராக் பண்ணலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஜிபிஎஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இப்போதெல்லாம் பலவற்றில் தகவல் பலகைகள் இல்லை. சில இடங்களில் போர்ட் மூலம் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவையும் கூட சரியாக இருப்பது இல்லை. பல தகவல் பலகைகள் துல்லியமான நேரங்களை கொடுப்பது இல்லை. பேருந்து எப்போது வரும், எப்போது புறப்படும், பேருந்து எங்கெல்லாம் செல்லும், பேருந்துகளின் ரூட்கள் என்னென்ன என்பது தொடர்பான எந்த விவரங்களும் துல்லியமாக இல்லை.

Buses are enabled with GPS in Tamil Nadu: People can easily track buses here after

இந்த நிலையில்தான் சென்னை பேருந்து நிலையங்களில் துல்லியமான தகவல் பலகைகள் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மெட்ரோ நிலையம், விமான நிலையம் போல பேருந்து நிலையங்களிலும் நேரத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

பேருந்து நிறுத்தங்கள் மற்றும் டெர்மினல்களில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் தகவல் பலகைகள் மூலம் MTC பேருந்துகளின் நிகழ்நேர இருப்பிடத்தை பயணிகள் கண்காணிக்க முடியும். அதாவது லைவாக பேருந்து எங்கே வந்துள்ளது, எப்போது நம்முடைய இடத்திற்கு வரும் என்று கணிக்க முடியும். துல்லியமாக இது வருகை மற்றும் புறப்படும் நேரத்தைக் காண்பிக்கும். MTC தரப்பு அளித்த பேட்டிகளின்படி, ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் (JICA) நிதியுதவியுடன் சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பின் (CITS) ஒரு பகுதியாக இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

ஜிபிஎஸ்: சென்னை மட்டுமின்றி முதல் கட்டமாக தமிழ்நாட்டில் இயக்கப்படும் பேருந்துகளில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஜிபிஎஸ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 2000 பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு உள்ளது.

கிட்டத்தட்ட 20000 பேருந்துகளில் 10 சதவிகித பேருந்துகள் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுக்க இயக்கப்பட்டு வரும் இந்த பேருந்துகள் எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருக்கும் என்பதை எளிதாக டிராக் செய்ய முடியும்.

புனரமைப்பு: சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் கடந்த சில நாட்களாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகின்றது. இன்னொரு பக்கம் பழைய பேருந்து நிலையங்கள் பல வேகமாக புனரமைக்கப்பட்டு வருகின்றன.

நவீன தோற்றத்திற்கு இந்த பேருந்து நிலையங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அதேபோல் கூடுதல் பயணிகளை கையாளும் விதத்திலும் இந்த பேருந்து நிலையங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில்தான் தற்போது சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் டிஜிட்டல் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளன.

பேருந்து நிலையங்கள்: சென்னை நகரத்தில் உள்ள 71 பேருந்து நிலையங்கள் மற்றும் 532 பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் தகவல் காட்சிகள் அமைக்கப்படும். இங்கே எளிதாக பயணிகள் பேருந்துகளின் வருகை மற்றும் புறப்பட்டை தெரிந்து கொள்ள முடியும். பேருந்துகளில் உள்ள ஜிபிஎஸ் மூலம் இந்த பணிகள் எளிதாக முடியும். ஏற்கனவே சென்னை மாநகராட்சி சென்னை பஸ் ஆப் என்ற செயலியை வெளியிட்டு உள்ளது.

இதில் ஏற்கனவே பேருந்துகளை துல்லியமாக கணிக்கும் வசதி உள்ளது. இதை அப்படியே தகவல் பலகைகளில் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். போன் பயன்படுத்த தெரியாதவர்களுக்கு இந்த பலகைகள் பயன் உள்ளதாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இந்த பலகைகள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

136 கோடி ரூபாயில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக பலகைகளை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. விரைவில் இந்த பலகைகள் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+