திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்?
சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் அடுத்து எந்த கட்சிக்கு செல்லப் போகிறார் என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுகவில் இணைய முயற்சி எடுத்தும் உடனடி வாய்ப்பு அமையாத நிலை உருவாகியுள்ளதாகவும், மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்துடனான பேச்சுவார்த்தையிலும் சில நிபந்தனைகள் தடையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, சி.விஜயபாஸ்கர் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்தார். அதற்கு முன்பாகவே தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை வழங்கிய விஜயபாஸ்கர், பின்னர் அதிமுகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். தனது அறிக்கையில், தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் தான் உயிராய் நேசித்த இயக்கம் சோதனைகளை சந்திக்கிறது என்றும், வேதனையுடன் இந்த முடிவை எடுக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சி விஜயபாஸ்கர்
இதன் பின்னர், அவர் எந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்ற கேள்வியே அரசியல் அரங்கில் முக்கிய விவாதமாக மாறியது. குறிப்பாக திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளின் பெயர்களே அதிகமாக பேசப்பட்டன. அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகு சி.விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து திமுக தலைமையுடன் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
திமுக
திமுகவில் இணையத் தயாராக இருப்பதாக அவர் விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் திமுக தரப்பில் இருந்து உடனடி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. காரணம், தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தல் தான் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இடைத்தேர்தல் நேரத்தில் அதிமுகவில் இருந்து விலகியவர்களை தமிழக வெற்றிக் கழகம் தனது பக்கம் இழுத்ததாக திமுக விமர்சிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் தயக்கம்
அத்தகைய சூழலில், அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சரை திமுக உடனடியாக இணைத்துக் கொண்டால் அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க சிரமம் ஏற்படும் என்ற கணக்கும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இடைத்தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்ற கருத்து திமுக வட்டாரங்களில் நிலவுவதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
மறுபுறம், தமிழக வெற்றிக் கழகத்துடனும் சி.விஜயபாஸ்கர் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இணைவது மட்டுமல்லாமல், இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு குறித்தும் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், இந்த பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய நிபந்தனை தடையாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் அமைச்சரவை பதவி வழங்கப்படும் என்ற உறுதியை தர வேண்டுமென சி.விஜயபாஸ்கர் விரும்புவதாக கூறப்படுகிறது.
அமைச்சர் பதவி
ஆனால் தமிழக வெற்றிக் கழக தரப்பில் அதுபோன்ற உறுதியை தற்போது வழங்க முடியாத சூழ்நிலை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அவர் தொடர்புடைய சில வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சர் பதவி குறித்து முன்கூட்டியே உறுதி அளிப்பது கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால், கட்சியில் சேர்ப்பதில் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், எதிர்காலத்தில் பதவி குறித்த எதிர்பார்ப்புகளில்தான் பேச்சுவார்த்தை சிக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இரட்டை சிக்கல்
ஒருபுறம் திமுக உடனடி முடிவு எடுக்க தயங்குகிறது. மறுபுறம் தமிழக வெற்றிக் கழகத்திடம் இருந்து எதிர்பார்த்த உறுதி கிடைக்கவில்லை. இந்த இரட்டை சிக்கலுக்கு நடுவே சி.விஜயபாஸ்கர் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியாமல் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்படும் தலைவர்களில் ஒருவராக மாறியுள்ள சி.விஜயபாஸ்கரின் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்லாமல் அவரது ஆதரவாளர்களும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.
-
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்!












Click it and Unblock the Notifications