இந்துக்களே உஷார்.. இஸ்லாமிய சதி துவங்கி விட்டது... பிரிவினையை அனுமதியோம்.. இது எச்.ராஜா!
வண்ணாரப்பேட்டை போராட்டத்திற்கு எச் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: "தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவர சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். இந்துகளே உஷார்" என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரிக்கை ட்வீட்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-க்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்தது.. தள்ளுமுள்ளு, போலீஸ் தடியடி.. மறியல்.. கைது.. விடுவிப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்தபடியே உள்ளன.

இதில் போராடிய பெண்களை போலீஸார் தாக்கியதாக கூறப்படுகிறது.. அதேபோல ஒரு முதியவர் உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது.. ஆனால் இதனை போலீஸ் தரப்பு மறுத்து விளக்கம் அளித்துவிட்டது.
பெண்களை தாக்கியதாக கூறப்படும் போலீசாருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இந்த கலவரம் தொடர்பாக அடுத்தடுத்த ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. அவைகளில்:
சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக் காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.மாநிலம் முழுவதும் கலவரக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்
— H Raja (@HRajaBJP) February 14, 2020
"சென்னை வண்ணாரப்பேட்டையில் காவல்துறை அதிகாரி முஸ்லீம் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாநிலம் முழுவதும் கலவரக்காரர்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்" என்று ஒரு பதிவு போட்டுள்ளார்.
1998ல் கோவையில் தொடர் குண்டு வைத்த கும்பல் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கலவரம்.
— H Raja (@HRajaBJP) February 14, 2020
"1998ல் கோவையில் தொடர் குண்டு வைத்த கும்பல் தமிழகம் முழுவதும் நள்ளிரவில் கலவரம்" என்று ஒரு பதிவும், "அதர்மம் தலைவிரித்தாடுகிறது. சீனாவின் அணுகுமுறை இங்கும் வரவேண்டும்" என்றும் பதிவிட்டுள்ளார்.
தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். இந்துகளே உஷார்.
— H Raja (@HRajaBJP) February 14, 2020
மேலும் "தேசப் பிரிவினைக்கு முன் இருந்த கலவரச் சூழ்நிலையைக் கொண்டுவரத் துடிக்கும் இஸ்லாமிய சதி துவங்கி விட்டது. மற்றுமொரு பிரிவினையை அனுமதியோம். இந்துகளே உஷார்", என்று எச்சரிக்கை விடுத்து அடுத்தடுத்த மொத்தமாக 4 ட்வீட்கள் பதிவிட்டுள்ளார். இந்த 4 பதிவிற்கும் காரசாரமான பதிலடிகள், கமெண்ட்கள் விழுந்தபடியே உள்ளன.. இதனால் எச்.ராஜாவின் ட்விட்டரே அதகளமாக காணப்படுகிறது.
அதர்மம் தலைவியித்தாடுகிறது. சீனாவின் அணுகுமுறை இங்கும் வரவேண்டும்.
— H Raja (@HRajaBJP) February 14, 2020
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications