4 பேர் ஏற வேண்டிய காரில் லக்கேஜுடன் வந்த 6 பேர்.. ஏற்ற மறுத்த கால் டாக்சி டிரைவர் மீது தாக்குதல்
சென்னை: சென்னை அருகே ஓலா கால்டாக்சி ஓட்டுநர்க்கு ரத்தம் வரும் அளவிற்கு அடித்த வாடிக்கையாளர்கள் மூன்று பேர் மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பொன்னேரியை சேர்ந்த ஞானபிரகாசம் (40) என்பவர் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் இன்று பணியில் இருக்கும்போது சென்னையை அடுத்த நாவலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள இராநந்தினி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிக்கப் போட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் 3 பெண்கள் 3 ஆண்கள் என 6 பேர் அதிக லக்கேஜுடன் வந்ததாகவும் அதற்கு ஓட்டுநர் ஞானபிரகாஷ் இந்த வாகனத்தில் 4 பேர் மட்டுமே செல்ல முடியும். 6 பேர் செல்ல முடியாது. அதுமட்டுமல்லாமல் லக்கேஜ் அதிகமாக உள்ளது என்று கூறியதாக கூறப்படுகிறது.

ஏற்க மறுப்பு
ஓலா கால்டாக்சி ஓட்டுநர் கூறியதை ஏற்க மறுத்த வாடிக்கையாளர்கள் ஆத்திரமடைந்து தகாத வார்த்தைகளால் ஓட்டுநர் ஞானபிரகாஷை திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் இருதரப்பினரும் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒரு கட்டத்தில் மூன்று ஆண்களும் சேர்ந்து ஓட்டுநர் ஞானபிரகாசத்தை கண்மூடித்தனமாக தாக்கியதில் மூக்கு தண்டு உடைந்து இரத்தம் அதிகளவில் வெளியேறியுள்ளது.

காவல் துறை கட்டுப்பாடு
ரத்த வெள்ளத்தில் காவல் கட்டுபாட்டு அறைக்கு போன் செய்துள்ளார் ஞானப்பிரகாசம். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீஸார் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர். வாடிக்கையாளர்கள் மூன்று பேர் தன்னை தாக்கியது மட்டுமல்லாமல் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக ஓட்டுநர் ஞானபிரகாஷ் புகார் அளித்துள்ளார்.

புகார்
அதேபோல் ஓட்டுநர் தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மூவர் கார் அளித்துள்ளனர். இரு தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். கால் டாக்சி ஓட்டுநர் கூறுவதில் நியாயம் இருக்கா இல்லையா என்று கூட பார்க்காமல் இது போன்று அவரை போட்டு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிய கார்
பொதுவாக இரு சக்கர வாகனம் என்றால் அதில் இருவர்தான் செல்ல வேண்டும். அது போல் சிறிய கார் என்றால் ஓட்டுநருடன் சேர்த்து 4 பேர், பெரிய ரக கார் என்றார் 6 பேர், 8 பேர் என செல்லலாம். அதற்கு மேல் என்றால் வேன்தான் சரிப்பட்டு வரும். சிறிய காரை புக் செய்துவிட்டு 6 பேர் ஏறுவோம் என அடம்பிடித்தால் எப்படி? கொரோனா காலத்தில் இன்னும் கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. இது போல் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றினால் அந்த கால் டாக்சி டிரைவர்தான் போலீஸ் நடவடிக்கைக்குள்ளாகிறார். இதை அறியாமல் அவரை காட்டுத்தனமாக தாக்கியுள்ளது கால் டாக்சி ஓட்டுநர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

டிரைவர்களின் கோரிக்கை
மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே டிரைவர்களின் கோரிக்கையாகும். எண்ணிக்கைக்கேற்ப கார்களும் உள்ளன என்பதை மறந்திடாமல் கார்களை புக் செய்ய வேண்டும் என்பதே டிரைவர்கள் விரும்புகிறார்கள். இதுகுறித்து கால் டாக்சி டிரைவர்கள் கூறுகையில், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இப்போதுதான் நாங்கள் தலை தூக்கி வருகிறோம். இதை மக்கள் புரிந்து கொள்ளாமல் அடாவடி செய்கிறார்கள். 4 பேர் ஏற்ற வேண்டிய காரில் 6 பேர், லக்கேஜ்களை ஏற்றினால் பள்ளம் மேடுகளில் செல்லும் போது வாகனம் அடிபடும். இதற்கு டிரைவர்தான் செலவு செய்ய வேண்டும். மேலும் அளவுக்கு மீறி ஏற்றினால் போக்குவரத்து போலீஸார் மடக்கினால் டிரைவர்தான் சொந்த காசு போட்டு அபராதம் செலுத்த வேண்டியிருக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.
-
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்!












Click it and Unblock the Notifications