ஓய்வூதியம் வாங்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் வங்கியில் கடன் பெற முடியுமா? சலுகைகள் என்னென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓய்வூதியம் வாங்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு , அந்த ஓய்வூதியம் நிலையான வருமானத்தை தருகிறது. அப்படி ஓய்வூதியம் வாங்குவோருக்கு மருத்துவ அவசர நிலை, குழந்தைகளின் திருமணம், வீடுகளை புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு சூழலுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அப்படிப்பட்ட சூழலில் ஓய்வூதியதாரர்கள் வங்கிகளில் கடன் பெற முடியுமா? நிச்சயம் முடியும் என்கிறார்கள் வங்கியாளர்கள். எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகள் வழங்கும் சலுகைகள் பற்றி பார்ப்போம்.

ஓய்வூதிய வருமானத்தை நம்பி இன்றைக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் வாழ்கிறார்கள். ஓய்வூதியத்தை பொறுத்தவரை நிலையான வருமானமாக இருக்கிறது. எனினும் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்க்கையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவது உண்டு. மருத்துவ அவசர நிலை, குழந்தைகளின் திருமணம், வீடுகளை புதுப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு சூழலுக்காக பணம் தேவைப்படும். இதுபோன்ற சூழ்நிலைகளில், வங்கிகளில் ஓய்வூதியக் கடன்கள் பெறலாம்.

loan government employees pension

இத்தகைய ஓய்வூதிய கடன் வாங்குவோருக்கு பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பரோடாவின் வங்கி அளிக்கும் சலுகைகள் பற்றி பார்ப்போம்.

பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஓய்வூதியக் கடன்:

பாரத ஸ்டேட் வங்கியின் ஓய்வூதியக் கடன் திட்டம் என்பது, மத்திய, மாநில மற்றும் பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரநிலை, குடும்ப நிகழ்வு அல்லது விடுமுறையை கொண்டாட, ஓய்வு பெற்றவர்கள் எளிதாக கடன் உதவி பெற அணுக முடியும்

எஸ்பிஐ: மத்திய மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் கடன் வாங்க தகுதி

வயது தகுதி: ஓய்வூதியதாரர்கள் 76 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

ஓய்வூதியம் எப்படி: ஓய்வூதியம் எஸ்பிஐ மூலம் வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்தம்: கடன் காலத்தில் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியக் கணக்கை வேறு வங்கிக்கு மாற்றுவதில்லை என்று திரும்பப் பெற முடியாது என்கிற உறுதிமொழி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

உத்தரவாதம்: குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியான ஒரு துணை நபர் அல்லது மூன்றாம் தரப்பில் இருந்து ஜாமீன் உத்தரவாதம் தேவை.

எஸ்பிஐ பாதுகாப்பு படைகளில் பணியாற்றியவர்களுக்கான ஓய்வூதியதாரர்களுக்கான தகுதி:

ராணுவம், விமானம், கப்பல், துணை ராணுவப் படைகள், கடலோர காவல்படை, ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றிலிருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் கடன் உதவி பெற முடியும்

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது தேவை இல்லை; அதிகபட்ச வயது 76 ஆண்டுகள்

பரோடா வங்கி ஓய்வூதியக் கடன்:

அவசரமான சூழல் மற்றும் தேவைகளுக்காக ஓய்வூதியதாரர்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியிலும் கடன் பெற இயலும். எதிர்பாராத சூழ்நிலைகளிலும் கூட ஓய்வு பெற்றவர்கள் மன அழுத்தமில்லாத வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடன் வழங்குகிறது பேங்க் ஆப் பரோடா

தகுதிகள்:

பரோடா வங்கி கிளைகள் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியதாரர்கள் கடன் பெற தகுதியானவர்கள்.

கருவூலம்/பாதுகாப்பு ஓய்வூதிய விநியோக அலுவலகம் (DPDO) மூலம் பாங்க் ஆஃப் பரோடா கணக்குகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களாக கிளை மூலம் தங்கள் ஓய்வூதியத்தை பெற்றிருக்க வேண்டும். போதுமான நிதி இல்லாததால் காசோலைகள் திரும்பப் பெறப்படாமல் இருக்க வேண்டும்.

கடன் எப்படி: அவசர தேவைகள் எதற்கு வேண்டுமானாலும் கடன்களைப் பெறலாம்.

திருப்பிச் செலுத்தும் காலம்: 70 ஆண்டுகள் வரை ஓய்வூதியதாரர்கள்: 60 மாதங்கள் வரை கடன் காலம். 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள்: 36 மாதங்கள் வரை கடன் காலம்.

திருப்பிச் செலுத்தும் திறன்: கடன் இஎம்ஐகள் உட்பட மொத்த மாதாந்திர விஷயங்கள், மாதாந்திர ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.

எஸ்பிஐ மற்றும் பாங்க் ஆஃப் பரோடா இரண்டுமே ஓய்வூதியத்தை தங்கள் கிளைகள் மூலம் வரவு வைக்க வேண்டும் என்பதை நிபந்தனையாக வைதுள்ளன, எஸ்பிஐ கடன் வழங்கினாலும் ஜாமீனுக்கு ஒருவரை கேட்கிறது. எனவே அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்ய ஓய்வூதியதாரர்கள் எங்கு வேண்டுமோ அங்கு கடன் வாங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+