புதிய லாவெண்டர் நோட்டு.. பழைய ரூ 100 நோட்டு தொடர்ந்து செல்லுமா? ஆர்பிஐ தந்த முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பழைய 100 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஆலோசனையை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.

புதிய ரூ.100 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாது என்று சிலர் செய்திகளை பரப்பி வருகின்றனர். இந்த வதந்திகளுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பழைய மற்றும் புதிய ரூ.100 நோட்டுகள் செல்லுபடியாகும் என மத்திய வங்கி உறுதி செய்துள்ளது. அதாவது பழைய மற்றும் புதிய ரூ.100 நோட்டுகள் இரண்டும் எப்போதும் போல செல்லுபடியாகும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

rbi

பழைய 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை.. அது எப்போதும் போல செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியதுடன், கடைக்காரர்கள், மக்கள், வணிகர்கள் இரண்டு பதிப்புகளையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது. 2018 ஆம் ஆண்டில் புதிய லாவெண்டர் ரூ 100 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பழைய 100 ரூபாய் செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை தொடர்ந்து இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பழைய அல்லது சேதமடைந்த ரூ.100 நோட்டுகளை மாற்ற விரும்புவோருக்கு, ரிசர்வ் வங்கி தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. வாடிக்கையாளர்கள் எந்த வங்கிக் கிளையையும் பார்வையிடலாம், நோட்டு மாற்றுப் படிவத்தை பூர்த்தி செய்து. நோட்டுகளை மாற்ற உங்களின் அடையாள அட்டையை வழங்க வேண்டும். இந்த செயல்முறை நேரடியானது மற்றும் கட்டணம் ஏதும் இல்லை.

அதிகரித்து வரும் குழப்பத்தை தீர்க்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்த 100 ரூபாய் நோட்டுகள் குறித்து புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

1938 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 100 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் வேறு வேறு வடிவத்தில், வண்ணங்களில் பயன்பாட்டில் உள்ளது, முதலில் மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு மாறுவதற்கு முன்பு ஜார்ஜ் VI மன்னர் இடம்பெற்றிருந்தார். 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட லாவெண்டர் நோட்டு இந்திய நாணயத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாக மாறியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் புதிய லாவெண்டர் ரூ 100 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பழைய 100 ரூபாய் செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை தொடர்ந்து இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி, பொதுமக்கள் நோட்டுகளை கவனமாகக் கையாள வேண்டும் என்றும், எழுதுதல், மடிப்பது அல்லது வெப்பம் மற்றும் சூரிய ஒளியில் அவற்றை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.சேதமடைந்த நோட்டுகளை தாமதமின்றி வங்கிகளில் மாற்ற வேண்டும்.

இந்த ஆலோசனையானது, நாணய முறையின் மீது பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணுவதற்கும், நாடு முழுவதும் சுமூகமான நிதிப் பரிவர்த்தனைகளை உறுதி செய்வதற்கும் ரிசர்வ் வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். பழைய நோட்டுகள் எப்போதும் போல செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியதுடன், கடைக்காரர்கள், மக்கள், வணிகர்கள் இரண்டு பதிப்புகளையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது.

இந்த விளக்கம் மூலம், இந்தியப் பொருளாதாரத்தில் பழைய மற்றும் புதிய ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவதை உறுதிசெய்து, நாணயத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+