குடும்ப அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை.. சென்னை வாழ் வெளியூர் மக்களே இதை நோட் பண்ணுங்க
சென்னை: குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வசிக்கும் மக்கள் இதுவரை கைரேகை வைக்காமல் பலர் இருக்கிறார்கள். அவர்களால் சென்னையிலேயே கைரேகை வைக்க முடியுமா? இதில் எதார்த்தம் என்ன என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாக நடைமுறைப்படுத்தும் மாநிலங்களில் முக்கியமானது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் சரியான முறையில் தங்களுக்கான அரிசி பருப்பு முதல், உதவி தொகை வரை அனைத்தையும் பெறும் இடமாக ரேஷன் கடைகள் உள்ளன.

தமிழ்நாட்டில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த அட்டைகளுக்கு உணவு பொருட்கள் நியாய நிலையில் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன,
இதன் மூலம் தமிழ்நாட்டில் 7 கோடியே 52 ஆயிரத்து 847 பேருக்கு உணவு பொருட்கள் பெற்று பயன்பெறுகிறார்கள். இவர்களில் அரசின் உத்தரவுப்படி 6 கோடியே 96 லட்சத்து 49 ஆயிரத்து 842 பேர் தங்களது ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்திருக்கிறார்கள்.
'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உணவு பொருட்களை மாநிலத்தின் எந்த ஊரில் உள்ளவர்களும் எந்த ஊரிலும் போய் வாங்கி கொள்ள முடியும். உணவுப்பொருள் வழங்கும் திட்டம் முற்றிலும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதுடன், ரேஷன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால், குடும்ப உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தமிழ்நாட்டின் எந்த ரேஷன் கடைகளிலும் தங்களுக்கு வேண்டிய பொருட்களை கைரேகை வைத்து வாங்கி செல்கிறார்கள்.
இதனிடையே அந்தந்த குடும்ப உறுப்பினர்களுக்குத்தான் அரசின் மானியம் சென்று சேர்கிறதா என்பதை அறிய விரும்பிய அரசு, அதற்காக வங்கிகளை போல் கே.ஒய்.சி. முறையை கையில் எடுத்துள்ளது. அதுதான் கைரேகை பதிவு முறை, இதன்படி நியாய விலை கடைகளில் பயனாளிகளின் விவரங்களை முழுமையாக பதிவு செய்து (குறிப்பாக அந்தியோதயா அன்னயோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்கள்) கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு தற்போது தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக ரேஷன் அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சுய விவரங்களை வெள்ளைத்தாளில் அளிப்பதுடன் விரல் ரேகை சரிபார்ப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே குடும்ப அட்டையில் கைரேகை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும், குடும்ப உறுப்பினர் பெயர் நீக்கப்படும் என்றும் சமூக ஊடங்களில் வேகமாக வதந்தி பரவியது. இதை திட்டவட்டமாக தமிழக அரசு அண்மையில் மறுத்தது.
மேலும் ரேஷன் அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை ரேஷன் ஊழியர்கள் சொல்லக்கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னையில் வசிக்கும் மக்கள் இதுவரை கைரேகை வைக்காமல் பலர் இருக்கிறார்கள். அவர்களால் சென்னையிலேயே கைரேகை வைக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி சென்னை மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பெண் ஒருவர் வந்து இன்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கடையில் பணியாற்றும் ஊழியர் கூறுகையில், உங்களுக்கு எந்த ஊரில் ரேஷன் கார்டில் பெயர் உள்ளதோ அந்த ஊரில் மட்டுமே கைரேகை வைக்க முடியும். அதுவும் உங்கள் கார்டு எந்த கடையில் உள்ளதோ அந்த கடையில் மட்டுமே கைரேகை வைக்க முடியும்.. நீங்கள் சென்னையில் எல்லாம் கைரேகை வைக்க முடியாது என்றார். எனவே சென்னையில் உள்ள வெளியூர் கார்டு வைத்துள்ள மக்கள் சொந்த ஊரில் போய் மட்டுமே ரேஷன் கார்டுக்கு கைரேகை வைக்க முடியும்.
இதனிடையே குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க இசேவை மையங்கள் தபால் நிலையங்களில் மக்கள் குவிந்து வருகிறார்கள் .. இதேபோல் கைரேகை பதிவு செய்யவும் பலர் ஆர்வமுடன் தபால் நிலையங்களுக்கு சென்று வருகிறார்கள்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications