வாட்ச் பழுது.. பேப்பரை தா! 1 மணி நேரத்திற்கு முன்பே பிடுங்கிய விஜிலேட்டர்! கதறிய குரூப் 2 தேர்வர்கள்
சென்னை : தேர்வறை கண்காணிப்பாளரின் கைக்கடிகாரம் பழுதானதால், 15 தேர்வர்கள் ஒருமணி நேரம் முன்னதாகவே டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வை எழுதி முடித்த அவலம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
தமிழ்நாடு அரசில் குரூப் 2, 2ஏ பிரிவில் காலியாக உள்ள 5,529 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு நேற்று முன்தினம் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.
200 கேள்விகளுக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில், பழுதான வாட்சை பார்த்து தேர்வு அறை கண்காணிப்பாளர் 2 மணி நேரத்திலேயே தேர்வை முடிக்க வைத்த அவலம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு
சென்னை பரங்கிமலையில் உள்ள தேர்வு மையத்தில் பல அறைகளில் தேர்வு நடைபெற்ற நிலையில், ஒரு அறையில் அறைக் கண்காணிப்பாளராக பணியில் இருந்த நபரின் கைக்கடிகாரம் ஒரு மணி நேரம் வேகமாக செயல்பட்டதன் காரணமாக 12.30 மணிக்கு முடிக்க வேண்டிய தேர்வை 11.30 மணிக்கே 15 தேர்வர்கள் முடித்துள்ளனர்.

கண்காணிப்பாளரின் அஜாக்கிரதை
தேர்வறை கண்காணிப்பாளர் தனது கைக்கடிகாரத்தில் 11 மணிக்கு பதில் 12 மணி என்று பார்த்துவிட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க வேண்டும் என்று தேர்வர்களை கட்டாயப்படுத்தியதால், அள்ளித்தெளித்த அவசர கோலத்தில் அரை மணி நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் ஏனோதானோவென்று பதிலளித்துள்ளனர் 15 தேர்வர்கள்.

கடிகாரத்தால் பிரச்சினை
பின்னர் அருகாமையில் உள்ள அறைகளில் தேர்வு எழுதியவர்கள் ஏன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றனர் என்று அந்த தேர்வறை கண்காணிப்பாளர் விசாரித்து விட்டு, பின் தன் அறையில் தேர்வெழுதிய தேர்வர்களிடம் ஐயோ மன்னித்துவிடுங்கள், இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறது, எனது கைக்கடிகாரம் பழுதாகிவிட்டது, தொடர்ந்து எழுதுங்கள் என்று கூறியிருக்கிறார்.

தேர்வர்கள் அதிர்ச்சி
ஆனால் OMR தாளில் அவசர கோலத்தில் ஏற்கனவே விடைகளை குறிப்பிட்டுவிட்ட 15 தேர்வர்களும், இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சம்மந்தப்பட்ட அறையில் தேர்வெழுதிய 15 தேர்வர்கள் சென்னை பூங்கா நகரில் உள்ள TNPSC அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர். தேர்வறை கண்காணிப்பாளரின் தவறால் 100 கேள்விகளுக்கு தவறாக விடையளித்துள்ளதாகவும், தங்களின் 3 ஆண்டுகால உழைப்பு வீணாகிவிட்டதாகவும், தங்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் என்றும் 15 தேர்வர்களும் கடிதம் மூலம் தேர்வாணையத்தில் வலியுறுத்தி உள்ளனர்.

மன்னிப்பு கடிதம்
தேர்வர்களின் கடிதம் பரிசீலிக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் உறுதியளித்துள்ளார். இதனிடையே, கைகடிகாரம் பழுதானதால் தவறிழைத்துவிட்டதாகக் கூறி அந்த தேர்வறை கண்காணிப்பாளரும் மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவரான தென்னரசு என்பவரிடம் பேசிய போது, " தேர்வறை கண்காணிப்பாளரின் அஜாக்கிரதை காரணமாக தங்களது பல ஆண்டுகால உழைப்பு வீணாகியுள்ளது. இதுகுறித்து தேர்வாணைய கூட்டத்தில் முழுமையாக விசாரித்து அதன் பின்னர் முடிவு எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு" என கூறினார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications