ஆளுநர் மாளிகை முற்றுகை.. வேல்முருகன் உள்பட 870 பேர் மீது 3 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு
சென்னை: காவிரி விவகாரத்தில் உபரி நீரை தரமறுக்கும் கர்நாடக அரசையும் மத்திய அரசையும் கண்டித்து ஆளுநர் மாளிகையை பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் கடந்த சனிக்கிமை அன்று தமிழக தமிழக வாழ்வுரிமை தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. இந்த போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த 870 பேர் மீது கிண்டி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ஆளுநர் கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடந்தது.

சைதாப்பேட்டை முதல் கவர்னர் மாளிகை வரை நடந்த முற்றுகை பேரணியில் இந்த பேரணி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் துணை பொதுசெயலாளர் சத்ரியன் வேணுகோபால் உள்பட அக்கட்சியன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய வேல் முருகன், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்துவிட கார்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது என்றும் கர்நாடக அரசின் அனைத்து செயல்களுக்கும் மத்திய அரசு துணை நிற்கின்றது என்றும் தெரிவித்தார், மேலும் சனாதனத்தின் பெயரால் தமிழ் மக்களிடையே பிரிவினையை ஆளுநர் ஆர்என் ரவி ஏற்படுத்துவதாகவும் வேல்முருகன் குற்றம்சாட்டினார்.
ஆயிரக்கணக்கனோர் போராட்த்தில் பங்கேற்று கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். தொடர்ந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற அனைவரையும் கிண்டி போலீஸார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.
இந்த சூழலில் கிண்டி ராஜ்பவனை நோக்கி பேரணி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முரகன் உள்பட 870 பேர் மீது கிண்டி போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications