Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேட்டையன் படத்திற்கு தடை கோரிய வழக்கு.. உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.. ஹைகோர்ட் நீதிபதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேட்டையன் படத்தை வெளியிட உடனடியாக தடை விதிக்க முடியாது என்று கூறினர் இது போன்ற பொதுநல வழக்குகளுக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.

rajinikanth vettaiyan

இந்த நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:- வேட்டையன் படத்தில் என்கவுண்டர் தொடர்பான வசனங்கள் உள்ளது. இந்த படத்தில் உள்ள என்கவுண்டர் தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும்.

அதுவரை படத்தை வெளியிட அனுமதி அளிக்கக் கூடாது என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவானது அவசர வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், வேட்டையன் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று கூறினர். மேலும், இதுபோன்ற பொதுநல வழக்குகளுக்கு உடனடியாக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

வேட்டையன் படம் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், படத்திற்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையன் திரைப்படம் ரஜினிகாந்தின் 170-வது படம் ஆகும். ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் த. செ. ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், டாணா ரகுபதி, மஞ்சு வாரியார் உள்பட பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இந்த படத்தின் டிரெயிலர் நேற்று மாலை வெளியானது. என்கவுண்டர் தொடர்பான சில வசனங்கள் இடம் பெற்று இருந்தது. ஒருவாரத்திற்குள் என்கவுண்டர் பண்ணியே ஆக வேண்டும் என சொல்லும் காட்சிக்கு தேவையில்லை, ஒருவாரம் ரொம்ப அதிகம் மூணே நாளில் டிபார்ட்மென்ட்டிற்கு நல்ல பெயர் வரவேண்டும்..

குற்றங்கள் தொற்று நோய் மாதிரி அதை வளர விடக்கூடாது. அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியாக இருப்பதை விட அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்லை.. என ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.அதேபோல, "அநீதியை நீதியாலதான் வெல்லனும், இன்னொரு அநீதியால இல்ல" என்ற வசனத்தை அமிதாப்பச்சன் பேசுகிறார். அமிதாப்பச்சன் வழக்கறிஞராக வருகிறார். அமிதாப்பச்சனுக்கு பதில் அளிக்கும் வகையில், "அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியா இருக்குறதவிட, அதிகாரத்த கைல எடுக்குறது தப்பில்ல" என்று ரஜினிகாந்த் பேசுவது போல டிரெயிலரில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+