ஜாதி வன்மம்.. பாகுபாடு.. சென்னை என்ஐஎப்டி இயக்குநர் மீது பேராசிரியர் பரபர புகார்.. போலீஸ் விசாரணை
சென்னை: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குநர் அனிதா மேபல் மனோகர் மீது பேராசிரியர் ஒருவர் ஜாதி ரீதியிலான புகாரை வைத்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்களில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நிறுவனமும் ஒன்று. சென்னை ராஜீவ் காந்தி சாலையில் இந்த கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனமான இது மத்திய ஜவுளித்துறை மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

பேஷன் டெக்னலாஜி
மாணவ, மாணவியர் படிக்கும் இந்த கல்வி நிறுவனத்தில் பேஷன் டெக்னாலஜி படிப்பின் பல்வேறு பிடிப்புகள் படிப்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியின் புதிய இயக்குநர் அனிதா மேபல் மனோகர் தன்னிடம் ஜாதி ரீதியாக பாகுபாடு காட்டுவதாக மூத்த பேராசிரியராக பணியாற்றும் ஒருவர் கூறியுள்ளார். சென்னை அடையாரு துணை கமிஷனரிடம் இவர் அளித்துள்ள புகாரில், நான் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியில் நீண்ட காலமாக பணியாற்றுகிறேன்..

ஜாதி பாகுபாடு
என்னிடம் யாரும் ஜாதிய பாகுபாடு காட்டியது கிடையாது. ஆனால் இயக்குநர் அனிதா மேபல் மனோகர் என்னிடம் ஜாதி பாகுபாடு காட்டுகிறார். மற்ற பேராசிரியர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்துகிறார் என்று சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். ஜாதி காரணமாக இவரின் இருப்பிடத்தை மாற்றி வேறு ஒரு அறையில் இருக்க வைத்ததாகவும், இவரின் இடத்தை வேறு ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த ஆராய்ச்சி உதவியாளருக்கு அளிக்கவும் அனிதா மேபல் மனோகர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

பட்டியல் இனம்
அதேபோல் நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவன் என்பதால் என்னுடைய காரை மற்ற பேராசிரியர்கள் காருடன் நிறுத்த விடாமல் அனிதா மேபல் மனோகர் தடுத்ததாகவும் அந்த பேராசிரியர் குறிப்பிட்டு உள்ளார். வெளிப்படையாக சக பேராசிரியர்கள் முன்னிலையில் தன்னை அசிங்க படுத்தியதாக அந்த பேராசிரியர் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில்தான் அந்த பேராசிரியர் சார்பாக போலீசிலும், ஜவுளித்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கைது கோரிக்கை
இந்த நிலையில் அடையாறு துணை கமிஷ்னர், அனிதா மேபல் மனோகரை விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு இருக்கும் குழு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியின் இயக்குநர் அனிதா மேபல் மனோகர் மீது விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications