விஷச்சாராய வழக்குகளை விசாரிக்க சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் நியமனம்.. மரக்காணத்திற்கு ஏஎஸ்பி கோமதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை : விஷச்சாராய வழக்குகள் விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், விழுப்புரம் விஷச் சாராய மரண வழக்கை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு விஷச்சாராய மரண வழக்கில் ஏ.டி.எஸ்.பி மகேஸ்வரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பலிக்கு காரணம், மெத்தனால் என்பது தெரியவந்தது. கெமிக்கல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை சாராய வியாபாரிகள் வாங்கிப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

CBCID officers appointed to investigate spurious liquor deaths in Tamil Nadu

மெத்தனால் உயிர்களை பறிக்கும் தன்மையுள்ளது என்பதால் இவற்றை விற்பனை செய்த நிறுவன அதிபர் இளையநம்பி, பரக்கத்துல்லா (எ) ராஜா, ஏழுமலை விளாம்பூர் விஜி மற்றும் 13 பேர் மீது மரக்காணம் காவல் நிலையம் மற்றும் சித்தாமூர் காவல் நிலையங்களிலுள்ள வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே விஷச்சாராய ப@லி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விழுப்புரம், செங்கல்பட்டு விஷச்சாராய மரண வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஷச்சாராயத்தால் 22பேர் இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் விஷச் சாராய மரண வழக்கை விசாரிக்க சிபிசிஐடி ஏ.எஸ்.பி கோமதி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு விஷச்சாராய மரண வழக்கில் ஏ.டி.எஸ்.பி மகேஸ்வரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+