முகிலனை நாய் கடித்துள்ளது.. சிபிசிஐடி விசாரணையின்போது தகவல்.. மருத்துவ சிகிச்சை
முகிலனை நாய் கடித்துவிட்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
சென்னை: முகிலனை நாய் கடித்துள்ளது சிபிசிஐடி விசாரணையின்போது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
6 மாதங்களுக்கு முன்பு மாயமான, சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழக போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிபிசிஐடி போலீசார் அவரை வலுக்கட்டாயமாக வேலூர் அடுக்கம்பறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றதாக கூறப்பட்டது.
அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நாய் கடித்துள்ளது
ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது காலில் நாய் கடித்துவிட்டதாகவும் இதை பற்றி போலீசாரிடம் முகிலன் தெரிவித்துள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளார்கள்.

வாக்குமூலம்
நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டுள்ளதாகவும் சரியாக சாப்பிடாததால்தான், உடல் பலவீனமாக இருப்பதாகவும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட முகிலனிடம் சிபிசிஐடி ஐஜி மற்றும் போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர்.

கேள்விகள்
அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்றது. முகிலனின் வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. இத்தனை நாள் எங்கே இருந்தார், யாரிடம் இருந்தார் உள்ளட்ட கேள்விகளை போலீசார் முகிலனிடம் கேட்டனர்.

கோர்ட்
முகிலன் பலவீனமாக இருப்பதாக வந்த மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் ஒப்படைக்கவுள்ளது சிபிசிஐடி போலீஸார். முகிலனும் கோர்ட்டில் ஒப்படைக்கப்படுவார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications